/* */

தெரிந்த நாயகன் - தெரியாத வரலாறு - நடன நாயகன் நடராஜன்

நடன கலையின் நாயகன் என்று பொருள்படும் படி நடராசர் (நடனராசர்) “ நடேசன் “ எனவும் அழைக்கப்படுகின்றார்.

HIGHLIGHTS

தெரிந்த நாயகன் - தெரியாத வரலாறு - நடன நாயகன் நடராஜன்
X

பரத நாட்டிய கரணங்களை ஆண் ஆடும் பொழுது, அது தாண்டவம் என்று அழைக்கப் பெறுகிறது. தாண்டவம் என்பது உள்ளிருக்கும் தெய்வீக பாவனைக்கேற்ப உடலின் பல்வேறு உறுப்புகள் இணைந்து இயங்குவதாகுமாம். இந்து மத ஆண் கடவுள்களான சிவபெருமான், விநாயகன், முருகன், திருமால் ஆகியோர் தாண்டவங்களை ஆடுபவர்களாக புராணங்களிலும், இந்து சமயத்திலும் சித்தரிக்கப்படுகின்றனர். இவர்களில் சிவபெருமான் இந்த தாண்டவங்கள் ஆடுவதில் வல்லவராகவும், நடன கலையின் நாயகன் என்று பொருள்படும் படி நடராசர் (நடனராசர்) " நடேசன் " எனவும் அழைக்கப்படுகின்றார். சிவபெருமான் ஆடும் நடனம், தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது. இந்த நடனமானது, சிவபெருமானின் முரட்டு சக்தியை, பிரபஞ்சத்தின் உருவாக்கம், பாதுகாப்பு மற்றும் அழிவுடன் தொடர்பு கொண்டதாக சித்தரிக்கிறது. இசை மற்றும் நடனத்தின் திறமை வாய்ந்த சிவபெருமான், தன்னுடைய தாண்டவங்களை, தண்டு முனிவருக்கு கற்பித்தார்.

ஆனந்த தாண்டவம் தொடங்கி பிரளய தாண்டவங்கள் வரை, 108 தாண்டவங்களை சிவபெருமான் ஆடியிருப்பதாக வேதங்களும், புராணங்களும் தெரிவிக்கின்றன. இதில் அவர் மட்டும் தனித்து ஆடியவை 48. தேவியோடு 36,. திருமாலுடன்அல்லி தாண்டவம் குட தாண்டவம் மல் தாண்டவங்கள் என 9.,முருகப்பெருமானுடன் குடை தாண்டவம், துடி தாண்டவம் என 3. தேவர்களுக்காக 12 என 108 நடனங்களை ஆடியிருக்கிறார் சிதம்பரத்தில் இவர் ஆடும் ஆனந்த தாண்டவத்தை தரிசிப்பவர்கள் முக்தி நிலையை அடைவார்கள் என்பது ஐதீகமாகும்.

சிவபெருமான் ஆடிய தாண்டவங்களில் ஏழு தாண்டவங்களில் இருந்து தான் சப்த ஸ்வரங்கள் தோன்றியதாம் இறைவன் சிவபெருமான் மோகினியான திருமாலுடன் ஆடிய ஆட்டமே முதல் ஆட்டம் எனச் சொல்லப்படுகிறது. தாண்டவங்களினால் தோற்றிய ஸ்வரங்கள்

காளிகா தாண்டவம் - ச

சந்தியா தாண்டவம் - ரி

கௌரி தாண்டவம் - க

சம்கார தாண்டவம் - ம

திரிபுர தாண்டவம் -ப

ஊர்த்துவ தாண்டவம்- த

ஆனந்த தாண்டவம் - நி

ஏழு சுரங்களை தோற்றுவித்தமைக்காக சிவபெருமானை சுந்தரர், ஏழிசையாய் இசைப்பயனாய் இருப்பவனே என்று போற்றியுள்ளார் நடனமாடியமையால் சிவனை கூத்தன் என்றும், தில்லையில் நடமாடியமையால் தில்லைக் கூத்தன் என்றும் அழைக்கின்றனர். ஆண் ஆடுவது – தாண்டவ நடனம், பெண் ஆடுவது – லாஸ்ய நடனமாகும் நடன நாயகன் நடராஜர் உருவத்தை சுற்றி அமைந்துள்ள திருவாசியில் 51 சுடர்கள் இருக்கும். திருவாசி என்பது ஓம் என்ற பிரணவ மந்திரத்தையும் 51 சுடர்கள் 51 எழுத்துக்களையும் சுட்டிக் காட்டக்கூடியது

ஒரு முறை சிவனின் நடனத்தைக் காண வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்கள் சிதம்பரத்தில் தவம் செய்து வந்தனர். அவர்களின் தவத்தினால் மகிழ்ந்து சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆட இசைந்தார். புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து, வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார். அசூரன் முலகனை காலால் மிதித்தபடி ஆடுகின்ற இந்நடனம் ஆனந்த தாண்டவம் என்று வழங்கப்படுகிறது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில்களை இயற்றும் தாண்டவமாக ஆனந்த தாண்டவம் அறியப்படுகிறது.

ஆனந்த தாண்டவம் பிரபஞ்ச இயக்க நடனம் என்று போற்றப்படுகிறது. நடராசர் என்றும் ஆடல்வல்லான் என்றும் போற்றுகின்ற சிவபெருமானின் இத்தாண்டவம், மற்ற தாண்டவங்களில் முதன்மையான தாண்டவமாக கருதப்படுகிறது. இந்நடனம் களிநடனம் எனவும் வழங்கப்படுகிறது.

பாற்கடலிருந்து வெளிவந்த விஷத்தை குடித்துவிட்டு சிவன், உரைந்து நின்றார். தேவர்களும், மூவரும் வணங்கி நிற்க, அப்போது சிவன் ஆடிய நடனம் சந்தியா தாண்டவம் எனப்படுகிறது. இந்த நடனத்தின் நேரத்தைதான் பிரதோசம் என்று கொண்டாடுகின்றோம்.

உமா தாண்டவம் என்பது அன்னை பார்வதி உடனிருக்கும் கோலத்தில் அமைந்தது. ஒரு கால் அபஸ்மார புருஷனின் மேல் இருக்கும் போது மற்றொரு காலைத் திரும்பி இருக்கும் நிலையில் கஜ ஹஸ்தம் என்னும் முத்திரையைக் காட்டிய வண்ணம் அமைந்திருக்கும் இந்தத் தாண்டவம். காத்தல் தொழிலை நிலைத்திருக்கச் செய்யும் தாண்டவமாய்க் கருதுவார்கள்.ஊர்த்துவ தாண்டவம்

சிவனும் சக்தியும் சமமென உணராத காரணத்தில் சிவனின் சாபப்படி சக்தி,உக்கிரமான காளியாக மாறினாள். தில்லையில் சிவனை அடைய தவம் செய்தாள். ஆனால் சிவன் காட்சியளிக்காததால் மேலும் உக்கிரமாக மாறினாள். அதனால் தில்லைவாழ் மக்கள் பாதிப்படைந்தனர். தேவர்கள், முனிவர்களின் வைத்த கோரிக்கையையும் நிராகரித்தாள்.

ஆடல்கலையின் வல்லவனான சிவனை தன்னுடன் போட்டிக்கு அழைத்தாள். சிவனுக்கும், காளிக்கும் இடையே நடனப் போட்டி நடந்தது. கடுமையான போட்டியில் இருவரும் சமநிலையில் இருந்தார்கள். அப்போது காதில் அணிந்திருந்த குண்டலத்தை கீழே விழச் செய்து, அந்த குண்டலத்தை தன் கால் விரலாலேயே எடுத்து காதில் மாட்டினார் சிவன்.

முனிவர்களும், தேவர்களும் இருந்த சபையில் காலை உயர்த்த விரும்பாத காளி, போட்டியில் பின் தங்கினாள். சிவபெருமான் போட்டியில் வென்றார். காலை உயர்த்தி ஆடிய தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று அழைக்கப்படுகிறது. இத்தாண்டவமாடியமையினால் சிவபெருமான் ஊர்த்தவ தாண்டவ மூர்த்தி என்றும், ஊர்த்தவ தாண்டவர் என்றும் அழைக்கப்படுகிறார்.

தருகாணவனத்து முனிவர்கள் ஆணவத்தினால் இறையருளைப் பெறாமல் இருந்தார்கள். அவர்களின் ஆணவத்தினை யானையாக மாற்றி சிவன் வெற்றிக் கொண்டார். ஆணவம் அழிந்த முனிவர்கள் சிவ பெருமானை வணங்கி முக்தி பெற்றனர். தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தையும், ரிஷிபத்தினிகளின் ஆணவத்தையும் அடக்க பிட்சாடனராய் வந்த இறைவன், தன்னுடன் விஷ்ணுவையும் மோகினி உருவில் அழைத்து வருகிறார்.

ரிஷி, முனிவர்களின் கர்வம் அடக்கப்படுகிறது. அப்போது இறைவன் மோகினியான திருமாலுடன் ஆடிய ஆட்டமே முதல் ஆட்டம் எனச் சொல்லப் படுகிறது. நாராயணனும், தான் தான், நாராயணியாக இருப்பவளும் தான் தான் என இறைவிக்குப் புரியாதா? உமையொரு பாகத்து இறைவனின் நடனத்தைத் தான் மட்டும் கண்டு களிக்க ஆசைப் பட்டாள் இறைவி, அவளின் ஆசையை நிறைவேற்ற இறைவன் ஆடியது தான் கெளரி தாண்டவம் எனச் சொல்லப் படுகிறது. சைவ ஆகமங்கள் படி இறைவனின் பிரம்மோற்சவத்துடன் இணைத்துச் சொல்லப் படுகிறது இந்தத் தாண்டவம். இதில் நந்தி இறைவனின் வலப் பக்கமும், இடது பக்கம் கெளரியான அம்பிகையும் காணப் படுகிறார்கள். ஆனந்தத் தாண்டவத்தில் இல்லாதபடிக்கு இதில் இறைவனின் இடப்பக்கத்துக் கைகள் ஒன்றில் பாம்பு காணப் படுகிறது.

இரு கண்களுடனும், எட்டுக் கரங்களுடனும் இறைவனால் ஆடப் பட்ட இந்தத் தாண்டவத்தில் வலப்பக்கக் கரங்களில் சூலம், உடுக்கை போன்றவையும், இடப் பக்கக் கரங்களில் மண்டை ஓடு, அக்கினி, மணி போன்றவையும் காணப் படுகிறது. வலக்கை அபய ஹஸ்தமும் இடக்கை கஜ ஹஸ்தமும் காட்டுகிறது. ஐந்தொழில்களையும் குறிக்கும் நடனம் காளிகா தாண்டவம் எனப் படுகிறது. இத்தாண்டவ நிலையிலேயே திருநெல்வேலியில் எம்பெருமான் காணப்படுகிறார் .

திருவாலங்காட்டில் "ரத்தின சபை"யில் ஆடும் ஆட்டமும் தஞ்சை மாவட்டம் நல்லூரிலும் உள்ள சிறபங்கள் "காளிகா தாண்டவம்" எனச் சிலரால் சொல்லப்படுகிறது. ஆனந்த தாண்டவம் தொடங்கி பிரளய தாண்டவம் வரையான தாண்டவங்களுள் சிவதாண்டவங்கள் என்று அறியப்படுகின்றன. இவை எண்ணிக்கை அடிப்படையில் பஞ்ச தாண்டவங்கள், சப்த தாண்டவங்கள் என்று பல பரிவுகளாக அறியப்படுகின்றன.

Updated On: 3 Jun 2021 11:31 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்