/* */

உள்ளாட்சித்தேர்தல் அமமுக நிலை: பரபரப்பான முடிவை அறிவித்தார் டிடிவி

வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அமமுக தனித்து போட்டியிடும் என்று, அதன் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

HIGHLIGHTS

உள்ளாட்சித்தேர்தல் அமமுக நிலை: பரபரப்பான முடிவை அறிவித்தார் டிடிவி
X

டிடிவி தினகரன்

தமிழத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நிலைப்பாடு குறித்து, அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், அதன் பொதுச் செயலாளர் டி.டி வி. தினகரன் தலைமையில் இன்று நடைபெற்றது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு பின்னர், நிருபர்களிடம் பேசிய டிடிவி தினகரன் கூறியதாவது: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அனைத்து வார்டுகளிலும் அமமுக தனித்து போட்டியிடும். வேட்பாளர்களின் தேர்வு ஏற்கனவே நடைபெற்று விட்டது.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தாலும், மீண்டும் மீண்டும் போட்டியிடுவோம். தேர்தல் என்பது ஜனநாயக போர்க்களமே. தோல்வி அடைந்துவிட்டால், வீட்டில் படுத்து தூங்க முடியாது. கடைசி மூச்சு வரை போராடுவோம். அதிமுகவினர் தைரியமின்றி உள்ளனர். இது, குழந்தைக்குக்கூட தெரியும். அதைதான் நயினார் நாகேந்திரன் கூறியிருப்பதாக, டிடிவி தினகரன் தெரிவித்தார்.

Updated On: 27 Jan 2022 11:10 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...