/* */

மத்திய வருமான வரித்துறைக்கு காங்கிரஸ் கட்சி வைத்துள்ள பாக்கி ரூ.135 கோடி

மத்திய வருமான வரித்துறைக்கு காங்கிரஸ் கட்சி வைத்துள்ள பாக்கி ரூ.135 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மத்திய வருமான வரித்துறைக்கு காங்கிரஸ் கட்சி வைத்துள்ள பாக்கி ரூ.135 கோடி
X

காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகம் (கோப்பு படம்)

காங்கிரஸ் கட்சி 102 கோடி வருமான வரி பாக்கி வைத்துள்ளது.அத்தொகை வட்டியுடன் சேர்த்து 135 கோடியாக அதிகரித்து உள்ளது. 135 கோடி வரி பாக்கி வசூலிப்பதற்காக காங்கிரஸ் கட்சிக்கு மத்திய வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. மேலும் காங்கிரஸின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ. 65 கோடியே 94 லட்சத்தை எடுத்தது.

இந்நிலையில் வருமான வரி துறையின் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க கோரி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் காங்கிரஸ் கட்சி மேல்முறையீடு செய்தது. ஆனால் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்து காங்கிரஸ் மனுவை தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் காங்கிரஸ் கட்சி ரிட் மனு தாக்கல் செய்தது.

அம்மனுவை நீதிபதிகள் எஸ்வந்த் வர்மா, குரு சைந்தகுமார் கௌரங்கி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவில் தலையிட முகாந்திரம் இல்லை என்று கூறி ஐகோர்ட் தலையிட மறுத்துவிட்டது. அதே சமயத்தில் வருமானவரித்துறை ஏற்கனவே வருவாயில் 48 சதவீத தொகையான ரூ. 65 கோடி எடுத்திருப்பதால் அதை குறிப்பிட்டு தீர்ப்பாயத்தை மீண்டும் அணுகுமாறு காங்கிரஸ் கட்சியை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். மேலும் காங்கிரஸ் கட்சியின் மனுவை முடித்து வைத்து தீர்ப்பு கூறினார்கள்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை அலுவலகம் வருமான வரித்துறைக்கு முறையாக வரி கட்டாமல் இருப்பது பல கேள்விக்கணைகளை எழுப்பி உள்ளது.

Updated On: 14 March 2024 2:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’