/* */

மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் -தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் மாநில திட்டக்குழு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் 1971 ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது.

HIGHLIGHTS

மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் -தமிழக முதலமைச்சர் அறிவிப்பு
X

மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்கள்

மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் தமிழக முதலமைச்சர் அறிவிப்பு.

தமிழகத்தில் மாநில திட்டக்குழு முத்தமிழறிஞர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் 1971 ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி ஏற்படுத்தப்பட்டது மாநில திட்டக்குழு தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையின் கீழ் ஒரு ஆலோசனை அமைப்பாக செயல்பட்டு மாநிலத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான செயல்பாடுகளில் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்து வருகிறது மாநில திட்டக்குழு துணைத்தலைவர் கீழ் வளர்ச்சி சார்ந்த முக்கிய துறைகளில் நிபுணர்களை உறுப்பினர்களாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.

மாநிலத் திட்ட குழுவானது கடந்த 23 4 2020 ஆம் ஆண்டு மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவாக மறுசீரமைப்பு செய்யப்பட்டு அதன் இன்றியமையாத பணிகளான இலக்கு நிர்ணயிப்பது கண்காணிப்பு மதிப்பீடு மற்றும் கொள்கைக்கான ஆலோசனை வழங்குதல் கொள்கைகளை உருவாக்குதல் சிறப்பு திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியமான பணிகளை மேற்கொண்டு வருகிறது இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் மாநில வளர்ச்சி கொள்கை குழுவை பின்வருமாறு திருத்தி அமைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி பேராசிரியர் ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராகவும், பேராசிரியர் சீனிவாசன் முழுநேர உறுப்பினராகவும், பேராசிரியர் விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில்,T.R.B ராஜா மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர், மல்லிகா சீனிவாசன், டாக்டர் ஜோ.அமலோற்பவனாதன், சித்த மருத்துவர் கு சிவராமன், மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதிநேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களைப் பற்றி தனித்தனியாக தெரிந்துகொள்வோம்.

பேராசிரியர் முனைவர் ஜெ ஜெயரஞ்சன்,..


மாநில வளர்ச்சிக் கொள்கை குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜே ஜெயரஞ்சன் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute ஒப்பி Development Studies) முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டவர். கடந்த 35 ஆண்டுகளாக தமிழக பொருளாதார மாற்றங்கள் குறித்து ஏறத்தாழ 65 ஆய்வுப் பணிகளை மேற்கொண்டவர் 50 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை பிரபல ஆய்வு இதழ்களில் வெளியிட்டுள்ளார். பல்வேறு இந்திய ஆய்வு நிறுவனங்களுக்கும் சர்வதேச ஆய்வு நிறுவனங்களுக்கும் ஆய்வுகள் மேற்கொண்டவர்.

பேராசிரியர் ராம. சீனுவாசன்.


பேராசிரியர் ராமு சீனிவாசன் சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதார உளவியல் துறையில் பேராசிரியராக உள்ளார். பொருளியல் பாடத்தில் முனைவர் பட்டம் பெற்று 30 ஆண்டுகளாக கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். 2006- 2011 ஆகிய ஐந்து ஆண்டுகள் தமிழக அரசின் திட்டக் குழுவில் உறுப்பினராக இருந்து வந்தார். அதில் முதல் இரண்டு ஆண்டுகள் முழுநேர உறுப்பினராக இருந்தார். 2017 முதல் 2020 வரை மூன்றாண்டுகள் சென்னை பல்கலைக்கழகத்தின் பதிவாளராக பணியாற்றினார். தற்பொழுது சென்னை பல்கலைக்கழகத்தின் பொருளாதார அறிவியல் துறையில் பேராசிரியராக, துறைத்தலைவராக, பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பிரிவின், மற்றும் பல்கலைக் கழக ஆட்சி மன்றக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.

பேராசிரியர் ம.விஜயபாஸ்கர்.


மா விஜயபாஸ்கர் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Stuidies) பேராசிரியராக பணியாற்றுகிறார். அனைத்துலக தொழிலாளர் அமைப்பு(International Labour Organisation), ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் அவசரகால நிதியம், ஐக்கிய நாடுகளின் சமூக வளர்ச்சிக்கான ஆராய்ச்சி நிறுவனம்(The United

Nations Research Institute for Social Development -UNRISD), ஆகியவற்றின் ஆலோசகராகவும் இருந்துள்ள அவர் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளியளுக்கான முனைவர் பட்டம் பெற்றவர்.

தீனபந்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி.


தீனபந்து 1982 ஆம் ஆண்டைச் சேர்ந்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர் பொருளாதாரத்தில் M.A., M.Phil. பட்டங்கள் பெற்ற இவர் இந்திய ஆட்சிப் பணியில் சேருவதற்கு முன்பாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை அலுவலகத்தில் பொருளாதார ஆய்வுத் துறையில் பணியாற்றியவர். தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, குடிநீர் வாரியம், கல்வித்துறை, மருத்துவம், மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகத் துறை, போன்ற பல்வேறு துறைகளில் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர். இவரது பணிக்காலத்தில் இலங்கை அகதிகளுக்கு வீட்டு வசதி திட்டம் மற்றும் கல்வி உதவித்தொகை திட்டம் சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கம் ராமநாதபுரம் மற்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் அனைத்து நகராட்சிகளிலும் பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட முக்கிய பணிகள் நடைபெற்றன.

பேராசிரியர் டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில்.


டாக்டர் சுல்தான் அகமது இஸ்மாயில் சென்னையில் உள்ள லாப நோக்கமற்ற அமைப்பான சுற்றுச்சூழல் அறிவியல் அறக்கட்டளையின் முன்னாள் இயக்குனர் ஆலோசகர். அவர் 25 நவம்பர் 1977 ஆம் ஆண்டு முதல் புதுக் கல்லூரியில் (The New College) விலங்கியல் பேராசிரியராக இருந்தார். பின்னர் அவர் விலங்கியல் துறையின் தலைவராகவும் உயிரி தொழில்நுட்பத் துறையின் தலைவராக சிறப்பாக செயல்பட்டவர். இந்திய மண்ணில் உயிரியலாளர் மற்றும் சுற்றுச்சூழல் அறிஞர் ஒவ்வொரு பகுதியிலும் கிடைக்கும் மண்புழுக்களை பயன்படுத்தி மக்கும் கழிவுகளை மறுசுழற்சி தொழில்நுட்பங்களை மையமாகக்கொண்டு உரமாக மாற்றுவதிலும் மண் வளத்தைப் பெருக்குவதில் இவரது பங்களிப்பு அளவிடற்கரியது. 1994-95 ஆம் ஆண்டிற்கான காஷ்மீர் விருது அவருக்கு இங்கிலாந்தில் வழங்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் இருந்து சுற்றுச்சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வுக்காக அறிஞர் அண்ணா விருது. ஜூன் 2018 ஆம் ஆண்டு சீனாவின் ஒன்றாவது உலக மண்புழு தொழில் மன்றத்தின் சிறப்பு பங்களிப்பு விருது. 2019ஆம் ஆண்டு the Champion of Chennai விருதும் பெற்றுள்ளார்.

சித்த மருத்துவர் கு சிவராமன்.


சித்த மருத்துவத்தில் பட்டமும் தமிழ் தஞ்சைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சித்த மருத்துவராக பணியாற்றி வருகிறார். சித்த மருத்துவத்தை அறிவியல் பார்வையுடன் தர நிர்ணயம் செய்து அதன் பயனை உலகெங்கும் பரவலாக இதிலும் உலகெங்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தமிழ் மருத்துவ முறையாக நகர்த்தியமைக்கும் பெரும் பங்கு வகித்தவர். 15 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுதானியங்களின் ஊட்டம் குறித்த பயன்பாட்டை அதன் சூழலுக்கு இசைவான உறவு குறித்த பயனை உலகெங்கும் பல தளங்களில் உரையாடி வெகுஜன ஊடகங்களில் கட்டுரைகளாகவும், காட்சி ஊடகங்களில் தெளிவுற உறைத்தும் இன்றும் சிறுதானிய பயன்பாட்டை பெரிதும் உயர்த்தியதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

வாங்க வாழலாம் இவர் எழுதிய நூல் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான விருது பெற்ற நூலாகும் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் சிறந்த மருத்துவர் விருது அமெரிக்காவின் பெற்ற அமைப்பின் விருது 2021 ஆம் ஆண்டில் கனடா நாட்டு தமிழ் சங்கத்தின் தமிழ் மரபு காவலர் விருது உள்ளிட்ட பல விருதுகள் பெற்றவர்.


பத்மஸ்ரீ முனைவர் நர்த்தகி நடராஜ்.


பத்மஸ்ரீ கலைமாமணி முனைவர் நர்த்தகி நடராஜ் தனது நளினமான நடத்தினால் உலகம் முழுவதும் எண்ணற்ற ரசிகர்களைப் பெற்றவர் உலக அளவில் எண்ணற்ற விருதுகளும் பட்டங்களும் பெற்றவர் குறிப்பாக இந்தியாவின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருதைப் பெற்ற முதல் திருநங்கை நடன கலைஞர் இவர் மிகப் பழமையான தஞ்சாவூர் நடைமுறைகளை முதன்மையாக கொண்டு இவர் வழங்கிவரும் நடனம் வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன.

மல்லிகா ஸ்ரீனிவாசன்.


மல்லிகா ஸ்ரீனிவாசன் டிராக்டர் அண்ட் ஈக்விப்மன்ட் லிமிடெட் என்ற வேளாண் கருவிகள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார் இவர் அங்கம் வகிக்கும் நிறுவனம் இந்திய வேளாண்மை வளர்ச்சிக்கு மிகப் பெரும் பங்காற்றி வருகிறது. ஆண்டிற்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சத்து 80 ஆயிரம் டிராக்டர்களை ஏறத்தாழ 100 நாடுகளில் விற்பனை செய்து வருகிறது. இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதார அளவியல் (Econometrics) பட்டப் படிப்பில் தங்கப்பதக்கம் பெற்றவர். 2014 ஆம் ஆண்டு இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

டாக்டர் ஜோ அமலோற்பவ நாதன்.


ஜோ அமர்பவர் நாதன் 1986ஆம் ஆண்டு ஒரு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆக அரசு பணியில் சேர்ந்து 30 ஆண்டுகள் பணிபுரிந்து சென்னை மருத்துவக் கல்லூரி ரத்த நாள அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் மற்றும் இயக்குனராக பணி ஓய்வு பெற்றவர். கடந்த 2008ஆம் ஆண்டு அப்போது முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் உருவாக்கிய உறுப்பு மாற்று சிகிச்சை திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக பொறுப்பேற்று சுமார் 8 ஆண்டுகள் அந்தத் திட்டத்தை நிறைவேற்றியவர். இத்திட்டம் இந்தியாவின் முன்னோடி என பல இந்திய சர்வதேச பத்திரிகைகள் பாராட்டின உலகப் புகழ்பெற்ற பிரிட்டீஷ் மெடிக்கல்(British Medical Journal) இத்திட்டத்தை பாராட்டி ஒரு கட்டுரை எழுதியது முக்கியமான ஒன்றாகும்.

டிஆர்பி ராஜா மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்.


டிஆர்பி ராஜா கடந்த 2011ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினராக மக்கள் பணியாற்றி வருகிறார் இவர் ஆலோசனை உளவியல் மற்றும் மேலாண்மை படிப்பில் (Counselling Psychology & Management) முனைவர் பட்டம் பெற்றவர் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொது நிறுவனங்கள் குழுவின் உறுப்பினராகவும் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினராகவும் சென்னை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும் அங்கம் வகித்தவர்.

Updated On: 6 Jun 2021 11:07 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  2. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  3. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  4. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  6. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
  7. ஈரோடு
    ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட...
  8. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  9. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  10. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....