/* */

புல்வாமா அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் குண்டு துளைத்து காவல் அதிகாரி மரணம்..!

தெற்கு காஷ்மீரில், புல்வாமா அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் உடலில் குண்டுகள் துளைத்து காவல் அதிகாரி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

புல்வாமா அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் குண்டு துளைத்து காவல் அதிகாரி மரணம்..!
X

தெற்கு காஷ்மீர் புல்வாமா அருகே வயல்வெளியில் பயங்கரவாதிகள் சுட்டதில் உயிரிழந்த காவல் அதிகாரி உடல் கிடந்த வீடு.

தெற்கு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் உள்ள சம்பூரா கிராமத்தின் நெல் வயல்வெளியில் இருந்து அந்த காவலர் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் விரைந்து சென்று, உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், உயிரிழந்தது காவல்துறை உதவி ஆய்வாளர் பரூக் அஹ்மத் மிர் என்று அடையாளம் தெரியவந்தது.

உயிரிழந்த காவல் அதிகாரி 23 ஐ.ஆர்.பி பட்டாலியனில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், குண்டுகள் துளைத்து, அப்பகுதியில் உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. உதவி ஆய்வாளர் பரூக் அஹ்மத் மீரின் உடலில் தோட்டா காயங்கள் இருந்தன.

இதையடுத்து, முதற்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின்படி, பரூக் அகமது மிர் நேற்று மாலையில், தனது நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது, பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து அப்பகுதியினரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Jun 2022 8:07 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது