/* */

ஏங்க...உங்களுடைய துாரத்து உறவுகளைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? ....படிங்க..

Relationship Quotes Tamil-உறவுகள் தொடர்கதை..... நம் உயிர் இருக்கும் வரை உறவுகளும் நிலைத்திருக்கும். துாரத்து உறவுகளைப் பற்றி நம் சந்ததியினருக்கு தெரியுமா? படிச்சு பாருங்க...

HIGHLIGHTS

Relationship Quotes Tamil
X

Relationship Quotes Tamil

Relationship Quotes Tamil

மனிதர்களாக பிறந்த நம் அனைவருக்கும் உறவுகள் என்பது உண்டு. அது அப்பா , அம்மா வகையிலான உறவுகள், தாத்தா, பாட்டி வகையிலான உறவுகள் என சொல்லிக்கொண்டே போகலாம். உறவுகள் என்பது ஒரு தொடர்கதையாகவே போய்க்கொண்டிருக்கும். காரணம் சந்ததியினர் வளர வளர உறவுகளின் கிளைகள் அதிகரித்துக்கொண்டேயிருக்கும். சரி துாரத்து உறவுகள் என்றால் என்ன? என கேட்கிறீர்களா...அதாவது நம் தாத்தா, பாட்டி வகையில் அவர்களுடன் உடன் பிறந்தவர்களின் சந்ததியினரின் கிளை உறவுகள் நம் துாரத்து உறவுகளாக அமைவதுண்டு. இரண்டுபேரின் உறவுகளின் சந்ததியினர் ஏதாவது ஒரு விருந்தில் நிகழ்ச்சியில் சந்திக்கும்போது இந்த உறவுகளைப்பற்றி பேசிக்கொள்வார்கள்.

அதுவும் இந்த உறவுகளைப் பற்றி இக்கால சந்ததியினருக்கு தெரிந்திருக்கவே வாய்ப்பில்லை. இதுபோன்ற நிகழ்வுகளில் சந்திக்கும்போது அறிமுகப்படுத்திக்கொள்வதும் உண்டு. ஒரு சில நேரங்களில் மாப்பிள்ளை, பெண் பார்க்கும் படலத்தின்போது உறவுகளைப் பற்றி பேசும்போது இரண்டுபேரும்துாரத்து உறவினர்களாக அமைவதும் உண்டு. இது அவர்களுக்கு தெரியாது. உறவுகளைப்பற்றிய பேச்சில் இந்த உண்மை இருவருக்கும் தெரியவரும்.

வெளிநாட்டில் வேலைபார்க்கும் கணவனைப் பிரிந்து வாழும் குடும்பம், மனைவியினைப் பிரிந்து வாழும் கணவன், காதலனைப்பிரிந்து வாழும் காதலி, காதலியைப் பிரிந்து வாழும் காதலன், வெளிநாடுகளில் உள்ள உறவினர்களைப் பிரிந்து சொந்த ஊரில் வாழும் உறவுகள், வேலை நிமித்தமாக வெளியூரில் தங்கி வாழும் உறவுகளைப் பிரிந்து வாழ்பவர்கள் இவர்கள் அனைவரையும் இந்த துாரத்து உறவுகளின் கீழ் கொண்டு வரலாம்.

இவர்கள் பிரிந்து வாழ்வதினால் ஏற்படும் மன உளைச்சல்கள் மற்றும் அன்பு பரிமாற்றங்கள் பிரிவின் துயரங்கள் உள்ளிட்டவைகளை குறித்த வாசகங்கள் இதோ உங்களுக்காக...

என் கண்களைவிட்டு நீ துாரமாக இருக்கலாம் ஆனால் உன் இதயத்தை விட்டு துாரமாக என்னால் இருக்க முடியாது

கண்களுக்கு அருகில் இருப்பதை விட இதயத்திற்கு அருகில் இருப்பதுதான் காதல்

நான் உன்னைவிட்டு தொலைவில் இருந்தாலும் என் நினைவு எப்போதும் உன்னைப் பற்றி மட்டுமே இருக்கும்

அருகில் இருந்தால்தான் அன்பு அதிகரிப்பது இல்லைதொலைவில் இருப்பதால் உன் மீது அன்பு குறைவதும் இல்லை

என் கண்கள் உன்னை பார்க்காமல் கூட இருந்துவிடும் என் இதயம் உன்னைப்பற்றி நினைக்காமல் இருக்காது

நம் மீது அன்பு வைத்துள்ள ஒரு இதயம் தொலைவில்இருந்தாலும்ஆயுள் வரைக்கும் அன்பாக இருந்தால்போதும்

நேசிப்பவர்களை தினமும் பார்க் கமுடியாவிட்டாலும் தினமும்அவர்களோடு மனம் விட்டு பேசி சிரிப்பதும் சந்தோஷம்தான்

தவிக்கும் இரு நெஞ்சம், தடுமாறுகிறது என் நெஞ்சம்என் காலடி கெஞ்சும் உன் வருகைக்காக

உன் அருகாமை மட்டுமல்ல உன் நினைவுகள் கூட என் கன்னம் சிவக்க வைக்கிறது

அது ஒருஇதமான காலை நேரம். ஏனோ என் நெஞ்சில் சிறு பாரம்

என்னையும் அறியாமல் கண்களில் ஈரம்..காரணம் நமக்குள் இருக்கும் துாரம்

வலிகளை விட கொடுமையானது நாம் நேசிக்கும் ஒருவரிடம் நாம் விரும்பும்போது பேசமுடியாமல் போவதுதான்.

துாரங்கள் பிரிவில்லை என் துணையே துயிலில் சந்திப்போம்வான் என் கனவில்

உன்குரல் என்ன குற்றாலமோ? பேச்சின் சாரல் மனதில் பட்டவுடன் உள்ளம் குளிர்கிறது

அந்த விடுமுறைக்கால பிரிவு நம்மைச் சூழும் வரைஎன்னுள் ரகசியமாய் ஒளிந்திருந்த புற்றுநோய் நீ

நான் இங்கே நீயும் அங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானதேனோ... வான் இங்கே நிலம் அங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ..

நீயில்லா ஒவ்வொரு பொழுதும் நம் நினைவுகளைக் தவிர வேறு எதற்கும் அனுமதி இல்லை என் அருகில்

உறங்கினால் கனவில் வருகிறாய்உறங்காவிடில் நினைவில் வதைக்கிறாய் காத்திருக்கிறேன் உன்னை விரைவில்அருகில் காண

இன்னும் துாரமாகிக்கொண்டே செல்கிறது நம் சந்திப்புநீயில்லா ஒவ்வொரு பொழுதும் நம் நினைவுகளைத் தவிர வேறு எதற்கும் அனுமதி இல்லை எ ன் அருகில்

எத்தனை உறவுகள் என்னை சுற்றி இருந்தாலும்என் உள்ளம் தேடும் ஒரே உறவு நீ மட்டும் தான்.

தூரங்கள் பிரிவில்லை என் துணையே துயிலில் சந்திப்போம் வா என் கனவில்.

உன் குரல் என்ன குற்றாலமோ பேச்சின் சாரல் மனதில் பட்டவுடன் உள்ளம் குளிர்கிறது.

உன் அருகாமை மட்டுமல்ல உன் நினைவுகள் கூட என் கன்னம் சிவக்க வைக்கிறது.பெருங்கடல் நிலங்களை ரிக்கிறது,ஆன்மாவை அல்ல.

உலகில் 7.125 பில்லியன் மக்கள்,நான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன்நம் காதலுக்கு எந்த தூரமும் பெரிதாக இல்லை.

உண்மையான அன்பில்,மிகச்சிறிய தூரம் மிக அதிகமாகவும்,மிகப்பெரிய தூரத்தை குறைக்கவும் முடியும்.எல்லாம், மிக எளிதாக.தூரத்தை அளவிட முடியும்.ஆனால் காதலால் முடியாது.

எனவே, அன்பு எப்போதும் தூரத்தை வெல்லும்.

அன்பு வைத்தவர்களுக்கு மட்டும் எப்போதும் இரண்டு தண்டனை ஒன்று பிரிவு..!மற்றொன்று நினைவு…!

நேரில் பார்க்க ஆசை, பார்க்க முடியவில்லை!கண்கள் இரண்டும் உன்னையே தேடுகிறது!

நாம் இருக்கும் இடம் தூரமாக இருந்தாலும்,உன் மனதில் என் மனதில் அருகில் இருக்கிறோம்!

உரசிடும் காதலோ, விரல்கள் கோர்த்திடும் காதலோ தேவையில்லை! தூரமாயினும்…

உள்ளம் உருகி உள்ளத்தால் எல்லா நாளும் உன்னை நினைக்க தோன்றும் அன்பு போதும்…

உன் மனை முற்றத்தில் நீ மதிமுகம் காட்ட, நான் காத்திருப்பேன்!

அன்றே என் வானில், பெளர்ணமி!

பிடித்தவர்கள் எல்லாம் அருகில் இருந்து விட்டால்,நினைவுகளுக்கு என்ன மரியாதை.

நீ என்னிடம் பேசவில்லை எனில்,சில நேரம் அழுகை வரும்!

சில நேரம் கோபம் வரும்!ஆனால் உன் நினைவுகள் மட்டும் என் மனதில் இருந்துகொன்டேதான் இருக்கும்!

பார்த்துக் கொண்டிருக்கும் உறவை விட,காத்துக் கொண்டிருக்கும் உறவுக்குத் தான் பாசம் அதிகம்!

உனை எண்ணும் நெஞ்சுக்கு உறக்கமில்லை!உனக்கான அழைப்பென்றும் முடிவதில்லை.

மறக்கவும் வெறுக்கவும் முடியாத உறவே,நீ இருப்பதோ, தூரமே!உன் நினைவுகள் இருப்பதோ கண்ணீரிலே!

நீ என்னை வீட்டு தூரமாக இருப்பதையே என்னால் ங்கிக்கொள்ள முடியவில்லை.அதைவிட பெரிய துன்பம் நீ என்னுடன் பேசாமல் இருப்பது!

நான் இல்லாமல் நீ அங்கு மகிழ்ச்சியாக இருக்கிறாய்,ஆனால் இங்கு நான் மரணத்தின் பிடியில் இருக்கிறேன் என்பதை மறந்து விடாதே!

அருகில் இருக்கும் அனைவரும் அன்பானவர்கள் இல்லை!அன்பானவர்கள் அனைவரும் அருகில் இருப்பதில்லை!

அன்று இரவெல்லாம் பகலுக்காக காத்திருந்தேன்!உன்னை நேரில் காண்பதற்கு!இன்று பகலெல்லாம் இரவுக்காக காத்திருக்கிறேன்,

உன்னை என் கனவில் காண்பதற்கு…எனக்காக இருக்கிறாய் என்பதை விட,எங்கோ நீ இருக்கிறாய் என்பதே தற்போதைய ஆறுதல்!

உன் அருகில் வாழும் பாக்கியம் எனக்கு இல்லை.ஆனால் என் அன்பில் வாழும் அதிர்ஷ்டம் உனக்கு மட்டுமே உண்டு.

விரல் தொடும் அருகில் இல்லாவிட்டாலும்,தினம் தினம் மனதைத் தொடும் உன் நினைவுகளுடன் நான்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 11 March 2024 5:52 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...