/* */

இரு மனங்களை இணைக்கும் அலைக்கற்றை உறவு கணவன்-மனைவி..!

Husband and Wife Quotes in Tamil-உலகில் எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் கணவன் மனைவிக்கும்; மனைவி கணவனுக்கும் என்ற நெருங்கிய பந்தமே இறுதிவரை தொடரும்.

HIGHLIGHTS

Husband and Wife Quotes in Tamil
X

Husband and Wife Quotes in Tamil

Husband and Wife Quotes in Tamil

Husband Quotes Tamil-காதல், காலங்களை கட்டிப்போட்டுவிட்டு கவிதைகள் எழுதும் பருவத்தில் கனியாக வருவது. வரங்களை வாங்கிவரும் தேவதூதர்களைப்போல காதல் வந்ததும் தவிக்கும் உள்ளங்களின் தவிப்பு வார்த்தைகளால் வடிக்கமுடியாதது. ஒரு சிறிய பார்வை ஒன்றே போதும் இரு விழிகளும் காதல் மொழிகளில் பேசிக்கொள்ள. மொழிகளற்ற ஒரு உலகம் காதல். பார்வைகளால் ஆயிரம் ஆயிரம் வார்த்தைகளை பரிமாறிக்கொள்ளும் மாய மொழி, காதல்.

பாடல்களை மட்டுமே ரசித்துக்கொண்டிருப்பவர்கள் காதல் வயப்பட்டால் பாடல்களின் வரிகள் பிடித்துப்போகும். செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என் மீது மோதுதம்மா....என்ற பாடலை ரசித்த மனம், காதல் வயப்பட்டதும் அந்த வரிகளின் அழகை ரசித்து அந்த தென்றல் என் மீது வந்து மோதாதோ..என்று எண்ணவைக்கும். மனைவியைக் கணவனும் ; கணவனை மனைவியும் காதலியுங்கள்..ஈருயிர் ஓருயிராய் வாழுங்கள். கணவன்,மனைவி மேற்கொள்கள் உங்களுக்காக..!

நம் அழகு என்பது முகத்திலோ, நிறத்திலோ இல்லை! நாம் இருவரும் வாழும் விதத்தில் உள்ளது.

அன்பாய் பேச ஆயிரம் உறவுகள் இருக்கலாம்; ஆனால் நம்முடைய அன்புக்காக மட்டும் சில உறவுகள் இருக்கின்றன. அவர்களை யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக் கொடுக்காதீர்கள்.

எதிர்பாராமல் பெய்யும் மழை போல என் வாழ்வில் வந்த நீ... உன் அன்பால் என் மனம் குளிரவைத்து, என் இருண்ட வாழ்க்கையில், வானவில்லாய் வண்ணங்கள் பூசினாய்...

நிறை குறை காணாது ஒருவர்மீது வைக்கும் அன்பு, முழுமையானது.

காதல், கேட்க இனியது. செய்ய கடியது! பழக எளியது! காதல் பெரியது. மற்றவை சிறியது. திருமணத்திற்கு பின், சேர்ந்தே வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தால் அது மிகவும் அரியது.

உயிரில் கலந்த உறவே, உனை என்றும் மறவேன் அறவே. உன்னுடன் இருந்தால், என் உலகம் இருக்கும் இனிதே. நிதமும் என் உடலில் வீச வேண்டும், உன் மணமே! என்னருகில் நீ இருந்தால், நான் ஒரு சிற்பமே. இல்லாவிடில், நான் ஒரு அற்பமே! நம்மை பிரிக்க ஆண்டவனும் நினையான் ஒரு கணமே. ஆகவே, இணைந்து வாழ்வோம் இக்கணமே..!

கம்பன் எழுதிய காவியங்களில் எழுதப்படாத காவியம், நம் காதல்..!

உன்னோடு நான் இருக்கையில், உலகின் பரப்பளவு சில சதுர அடிகள்..!

மழை பொழியும் அந்த மகிழ்வான நேரம், ஓர் குடையில் இருவரும் ஒன்றாக தொலைதூரம் இடைவெளி இல்லாது, இருக்கமாய் இருவரும் காதலிலே பயணிப்போம்!மழையை ரசித்தபடி, மனமும் குளிர்ந்தபடி செல்ல வேண்டும் ஓர் அழகிய காதல் பயணம்..!

நீயும் நானும் வானும் நிலவும் போல சேர்ந்தே இருப்போம் வா..!

அழகிய நிலவொளியில் நாம் இருவர் மட்டும் தனியாக! விழிகள் போதும், நாம் இருவரும் பேசிக்கொள்ள, உன் தோளில் நான், என் இதயத்தில் நீ..! மொழிகள் தேவையில்லை..!

உந்தன் கன்னக்குழியில் புதைந்து, நான் முத்தாய் மாற ஆசை..!

என் கண்கள் தினமும் பலரைப் பார்க்கலாம். ஆனால், என் மனம் மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டுமென நினைப்பது, உன்னை மட்டுமே..!

அழகைக் காட்டிமயக்கும் இந்த மாய உலகில், நீ மட்டும் உன் அன்பைக் காட்டி என்னை மயக்கினாய்! அந்த மயக்கத்திலிருந்து கடவுளால் கூட என்னை வெளிக் கொண்டுவர முடியவில்லை. எனென்றால், உன் அன்பு அந்த கடவுளையே சிறை பிடிக்கும்..!

ஒரு நல்ல கணவரின் அன்பு என்பது ஆயிரம் தாய்களின் அன்பிற்கு நிகர்...!தினம் தினம் சண்டை போடுவேன்.. சில நொடிகள் கோபமாய் பேசுவேன்.. ஆனால் உனக்கொரு வலி என்றால் முதலில் கலங்குவது என் விழி தானே..

மனைவியை எங்கும் விட்டுக்கொடுக்காத கணவன், கணவனிடம் எதையும் மறைக்காத மனைவி, நண்பர்கள் போன்ற பிள்ளைகள், இவையாவும் அமைந்தால் வாழ்க்கை சொர்க்கமே..!

மனைவி வாழும் இரண்டாவது கருவறை கணவன் இதயம் தான்..

எப்போது ஒரு பெண் அன்பான கணவனை பெறுகிறாளோ அப்போது அவள் தன்னை அதிர்ஷ்டசாலியாக உணருகிறாள்.!

எல்லா பெண்களுக்கும் கிடைத்து விடுவதில்லை எந்த சூழ்நிலையிலும் உன்னை விட்டு கொடுக்க மாட்டேன், விட்டு செல்லவும் மாட்டேன் என்று இருக்குமளவிற்கு ஓர் ஆண்..!

பெண் மனம் விரும்புவது காசோ பணமோ அல்ல, தலை சாய்த்துக்கொள்ள ஒரு தோளும் நடந்ததெல்லாம் சொல்லி தீர்க்க ஒரு உறவும் தான்..!

எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் ஓர் ஆணுக்கு மனைவிதான் ஓர் பெண்ணுக்கு கணவன் தான் அதற்கு இணை வேறேதும் இல்லை விழுதுகள் மரத்தை தாங்கலாம் வேர் மட்டுமே அதை வாழவைக்க முடியும் கணவன் மனைவி எனும் உறவும் இதைப்போல தான்..!

ஒரு பெண்ணுக்கு குழந்தையை கொடுப்பது ஆண்மை இல்லை.. இறுதி வரை அந்த பெண்ணை குழந்தையாக பார்த்துக் கொள்வதே உண்மையான ஆண்மை..!

கணவனின் சிறந்த தோழியாக மனைவியும், மனைவியின் சிறந்த தோழனாக கணவனும் இருக்கும்போது, அவர்கள் சிறந்த தம்பதியாகிறார்கள்..!

நான் உயிரோடு இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் என் உயிர் உன்னோடு இருப்பது யாருக்கு தெரியும் உன்னை தவிர..!

ஆயிரம் தடவை உன்னிடம் சண்டை இட்டு கொண்டு பேசாமல் இருந்து விட்டு சமாதானம் ஆகும் போதும் ஏனோ தெரியவில்லை புதிதாய் காதலிப்பது போன்றே ஓர் உணர்வு ஏற்படுகின்றது..!

நான் உன்னை நேசிப்பது உன்னோடு வாழ மட்டுமல்ல உனக்காக மட்டும் வாழ..!

அன்பு நிறைந்த உள்ளம் தான் அதிகம் சண்டை போடும். பிரிவதற்கு அல்ல.. பிரியக் கூடாது என்பதற்காக..!

உன்னிடம் சண்டை போடும் இந்த இதயத்தை விட்டு விடாதே..! என்னைவிட உன்னை யாரும் நேசித்து விட முடியாது..!

எந்த உறவாக இருந்தாலும் சின்ன சுயநலம் கலந்து இருக்கும்..! சுயநலம் இல்லாமல் நம்மை காக்கும் ஓர் உறவு, கணவன் மட்டுமே..!

என் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படவில்லை .... நீ என்னை திருமணம் செய்தால்தான் என் வாழ்வு சொர்க்கமாக்கப்படுகிறது..!

தன் பிரசவ மயக்கம் தெளிந்ததும், ஒரு பெண் முதலில் பார்க்க விரும்புவது தன் முதல் குழந்தையாகிய அவள் கணவனையே..!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 11 March 2024 5:57 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு