/* */

காதல் தோல்வியால் வலிக்கும் மேற்கோள்கள்..! ஃபீல் பண்ணி பாருங்க..!

Feeling Quotes in Tamil-தோல்வி என்பது இழப்புகளால் ஏற்படும் துன்பம். அதிலும் காதல் தோவியால் ஏற்படும் சோகங்களை சொல்லி மாளாது.

HIGHLIGHTS

Feeling Quotes in Tamil
X

Feeling Quotes in Tamil

Feeling Quotes in Tamil

பிரிவுத்துன்பம் என்பது ஒருவகை மறக்கமுடியாத சோகம். அதை அனுபவிப்பவருக்குத்தான் அதன் வேதனை புரியும்.

  • நேசிக்க யாரும் இல்லாத போது தான் யோசிக்க வைக்கிறது வாழ்க்கை..!
  • வழிகளைத் தேடித் தான் செல்கிறோம்.. ஆனால் போகும் இடமெல்லாம் காத்திருப்பது என்னவோ வலிகள் மட்டும் தான்..!
  • என் புன்னகைக்குப் பின்னால் ஒரு புண்பட்ட இதயம் இருக்கிறது..!
  • இருப்பதை விட இழந்ததைத் தான் மனம் அதிகம் தேடுகிறது..!
  • கவலை இல்லாத மனிதர் இருவர். ஒருவர் கருவறையில்.. மற்றொருவர் கல்லறையில்..!
  • எளிதில் கிடைப்பதில்லை.. எல்லா சூழ்நிலைகளிளும் நம்மை புரிந்துகொண்டு நம்முடன் நமக்காக இருக்கும் உறவுகள்..!
  • கவலைப்படத் தொடங்கும் தருணத்தில் நாம் எப்போதும் காயப்படுகிறோம்..!
  • வாழ்வதற்கு ஆயிரம் காரணம் கேட்கும் மனசு தான்.. சாவதற்கு ஒரு காரணம் போதும் என்கிறது..!
  • எத்தனை உறவுகள் இருந்தாலும், நம் உணர்வுகளை புரிந்து கொள்ளும் உறவு நம்மோடு இல்லையெனில் வாழ்க்கை சற்று கடினம் தான்..!
  • உங்கள் கண்ணீரின் மதிப்பு தெரியாத நபருக்காக ஒருபோதும் அழாதீர்கள்..!
  • பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில் இதயம் தா(தூ)ங்காது..!
  • இதயம் வெளிப்படுத்த முடியாத வார்த்தைகள் கண்ணீர்..!
  • தவறை சரியாக செய்தவன் தலை நிமிர்ந்து நிற்கிறான்.. நல்லதை தவறாக செய்தவன் தலை குனிந்து நிற்கிறான்..!
  • அதிகம் நம்பிக்கை வைக்கும் இடத்தில் அதிகம் ஏமாற்றம் அடைகிறோம்..
  • வாழ்க்கை என்று வெறுத்துப் போகிறதோ.. அன்று தான், ஒவ்வொருவரும் மரணத்தை விரும்ப ஆரம்பிக்கின்றனர்..!
  • நேரம் காயங்களை ஆற்றவில்லை என்றாலும், அது வலியை பழக்கப்படுத்தும் அளவுக்கு பழையதாக ஆக்குகிறது..!
  • எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடு. ஆனால் அது யாருக்காக என்பதில் மட்டும் கவனமாக இரு..!
  • அதிகமாக எதிர்பார்ப்பது நம்மை நாமே காயப்படுத்துவதற்கான ஒரு வழியாகும்..!
  • நான் கற்றுக்கொள்ள விரும்பாத பாடங்களை வாழ்க்கை எனக்குக் கற்றுத் தருகிறது..!
  • எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மெழுகுவர்த்தி போல தான், தூரத்தில் இருந்து பார்த்தால் ஒளி மட்டுமே தெரியும்.. அருகில் சென்று பாருங்கள் அவர்கள் உருகி கண்ணீர் வடிப்பது தெரியும்..!
  • நான் தனியாக இருக்கும்போதெல்லாம், துக்கம் என்னைத் தன் துணைக்கு அழைக்கிறது..!
  • உலகில் உள்ள சித்ரவதைக்கு எல்லாம் செல்லப் பெயர் வைத்தால் அது தான் காதல்..!
  • நாம் பெரிய மனிதர்களாக வேண்டும் என்ற பெரிய முயற்சியில், சிறிய மனிதர்களாகி விடுகிறோம்..!
  • அன்பின் ஏணியில் நாம் எவ்வளவு அதிகமாக ஏறுகிறோமோ, அவ்வளவு கடினமாக நாம் விழுகிறோம்..!
  • புன்னகையை விட கண்ணீரை நம்பலாம். ஏனென்றால் ஒவ்வொரு கண்ணீருக்கும் பின்னால் ஒரு உண்மையான காரணம் இருக்கும்..!
  • நான் ஒருபோதும் காதலிப்பதை நிறுத்துவதில்லை, அதைக் காண்பிப்பதை நிறுத்திவிட்டேன்..!
  • உடலுக்கு உயிர் கூட சுமை தான்.. நாம் உயிராக நினைக்கும் ஒரு உயிர் நம்மை மறந்து போகும்போது..!
  • என்னைப் புரிந்து கொள்ளும் அளவிற்கு எவரும் என்னுடன் பழகவில்லை.. என்னை மறந்துவிடும் அளவிற்கு நானும் எவரிடமும் பழகவில்லை..!
  • வாழ்க்கையில் கடினமான பகுதி புன்னகையை போலியாகக் காட்டவும், கண்ணீரை நிறுத்தாமல் மறைக்கவும் முயற்சிப்பது..!
  • ஒருவரின் மனதை புரிந்துகொள்ள முடியவில்லையே என்னும் வேதனையை விட, முழுமையாக மனதை வெளிப்படுத்தியும் ஒருவர் புரிந்துகொள்ளவில்லை என்னும் வேதனை அதிகம்..!
  • பிடித்தவர்கள் பேசவில்லை என்று கவலைப்படாதீர்கள்..! நம்மை பிடித்து இருந்தால் பேசாமல் இருக்க மாட்டார்கள்..!
  • ஓர் செழித்த பாலைவனத்தில், கருகிய இலையுடன் நிற்கும் ஒற்றை மரமும், நிழல் தரும்..!
  • பிரிந்து செல்லும் ஒவ்வொரு உறவுகளும், எதோ ஒரு வகையில், எதையாகிலும் கற்று கொடுத்து செல்கின்றனர்..!
  • காதல் முட்டாள் தனம் என்பதால் தான், சில அறிவாளிகள், அதை சுயநலமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்..!
  • எதிர்பாராமல் பார்த்த உனை தான், எதிர்பார்த்து காத்திருக்கிறது என் விழிகளும், அது சுமந்த இமைகளும்..!
  • இந்த வெறுமை விடாதா..! ஒரு சிறகு விழாதா..! சிறு பறவை எழாதா..! அது கனவைத் தொடாதா..! இந்த ஏக்கங்கள் எல்லாம் வீணா..?
  • சில நேரங்களில், அடுத்தவர்களை எதிர்பார்ப்பதை விட, நம் வழியில் தனியாக பயணிப்பதே சிறந்தது..!
  • நம்மைத் தவறாக நினைத்து விட்டார்களே எனப் புலம்பாமல், நம்மை இவ்வளவு தான் புரிந்து வைத்துள்ளார்கள் என விலகி விடுவதே சிறப்பான பதிலடி..!
  • தனியாக இருப்பதால் எண்ணி, தனிமையில் விட்டுவிடுகிறோம் நம்மவர்களை..!
  • வாழ்க்கையில் யாரையும் சார்ந்து வாழ்ந்துவிடாதீர்கள்... ஏனெனில், உங்கள் நிழல் கூட வெளிச்சம் உள்ளவரைதான் துணைக்கு வரும்...!


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 18 March 2024 6:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்