/* */

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

தினசரி ஒன்றரை லட்சம் பக்தர்கள் சபரிமலை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

HIGHLIGHTS

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
X

சபரிமலை ஐயப்பன் கோயில். (கோப்பு படம்).

மண்டல-மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சபரிமலையில் பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக முன்பதிவு செய்த பக்தர்கள் 18 மணிநேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், சபரிமலையில், ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், கூட்டத்தை கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்கவும் கேரள அரசு மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஆகியவற்றை கேரள உயர்நீதிமன்றம் வலியுறுத்தி வருகிறது.

இதனிடையே சபரிமலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நிலக்கல்லில் நடைபெற்று வரும் உடனடி தரிசன முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாகனங்களில் வரும் பக்தர்கள், சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல், எரிமேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 8 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் பக்தர்கள் சபரிமலை வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், ஆந்திரா, தமிழ்நாடு, திருச்சூர், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் புனித தலத்திற்கு செல்வதை நிறுத்திவிட்டு வீடு திரும்பியதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்துறையினர் வாகனங்களை தடுத்ததால் பார்வையாளர்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சபரிமலை பக்தர்கள் பம்பைக்குள் அனுமதிக்காத அதிகாரிகளின் முடிவைக் கண்டித்து எருமேலியில் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் செய்தனர்.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ய எருமேலி - ரன்னி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். ஏட்டுமானூர் மகாதேவர் கோயிலில், பல மணி நேரம் காத்திருந்தும் பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல விடாமல் தடுத்ததையடுத்து, அதிகாலையில், பக்தர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாகனங்களை தடுத்ததால், எருமேலியில் இருந்து நிலக்கல்லுக்கு பக்தர்கள் வர எட்டு மணி நேரத்துக்கு மேல் ஆனதாக கூறப்படுகிறது அனைத்து பேருந்துகளும் நெரிசலில் சிக்கியதால், பம்பைக்கு செல்ல முடியவில்லை.

18-ம் படியேறி ஐயப்பனை தரிசிக்க நீண்ட நேரம் ஆவதால், பக்தர்கள் சிலர் சன்னிதானத்திற்கு செல்லாமலேயே மற்ற இடங்களில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சபரிமலையில் அரசு இயந்திரம் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டதாகவும், நிலைமையை மேம்படுத்த அரசு தரப்பில் எந்த முயற்சியும் இல்லை என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். பம்பாவில், பக்தர்கள் தண்ணீர் அல்லது உணவு இல்லாமல் 8-9 மணி நேரம் வெயிலில் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். இந்த அவசரம் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்றும் பம்பாவில் ஒரே நேரத்தில் 15,000 யாத்ரீகர்கள் தங்கும் வகையில் ஒரு விரிபந்தல் இருந்ததாகவும் , இந்த வசதி 2018 வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது, இப்போது இரண்டு சிறிய ஓய்வு இடங்கள் மட்டுமே உள்ளன, என்றும் கூறினர்

Updated On: 2 Jan 2024 11:45 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...