/* */

அசாமில் வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்த பிரதமர் மோடி

உள்கட்டமைப்பு கட்டுமானத்திற்கு முன்னுரிமை அளித்து உண்மையான சமூக நீதியை பாஜக அரசு நிலைநாட்டியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

அசாமில் வந்தே பாரத் ரயில் சேவையை துவக்கி வைத்த பிரதமர் மோடி
X

பைல் படம்.

அசாமில் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். மேற்கு வங்கத்தின் நியூ ஜல்பைகுரியில் இருந்து அசாமின் கவுகாத்தி வரை வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, வந்தே பாரத் விரைவு ரயில் சேவை அசாமின் சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிக்கும் என தெரிவித்தார். கடந்த 9 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு ஏழைகளின் நலனுக்கு அதிக முன்னுரிமை அளித்ததாகவும் குறிப்பிட்டார்.

கடந்த ஆட்சியில் உள்கட்டமைப்பு அனைவருக்கும் சமமாக இல்லை எனக் கூறிய அவர், உள்கட்டமைப்பு கட்டுமானத்திற்கு முன்னுரிமை அளித்து உண்மையான சமூக நீதியை பாஜக அரசு நிலைநாட்டியதாக கூறினார். மேலும், முந்தைய ஆட்சியால் வடகிழக்கு மக்கள் நீண்டகாலமாக வளர்ச்சியின்றி இருந்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Updated On: 29 May 2023 5:45 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்