/* */

குடியரசுத்தலைவர் தேர்தல்: தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாய்ப்பு உண்டா..?

presidential election of india-ஆளும் பா.ஜ.கவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் குடியரசுத் தலைவர் பதவிக்கு வேட்பாளர் யார் என்ற பரபரப்பு அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

குடியரசுத்தலைவர் தேர்தல்: தமிழிசை சவுந்தரராஜனுக்கு வாய்ப்பு உண்டா..?
X

தற்போதைய கேரள ஆளுநர் ஆரிஃப் முஹம்மது கான், ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு 

presidential election of india-குடியரசுத்தலைவர் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேர்வு செய்யப்படவுள்ள வேட்பாளர் யார் என்பதே நடப்பு அரசியில் பரபரப்பான கேள்வி.

தற்போதைய சூழலில் ஆளும் கட்சி சார்பில் 4 பேர் அடிபட்டாலும் கூட 2 பேருக்கு மட்டுமே அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. பா.ஜ.க சார்பில் பேசப்படுவதில் முன்னணியில் இருப்பவர் சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்த திரௌபதி முர்மு. இவர் ஜார்க்கண்ட் ஆளுநராக இருந்தவர். கடந்த குடியரசுத்தலைவர் தேர்தலிலும் இவர் பெயர் பேசப்பட்டது.

தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன்

குடியரசுத்தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே யார் வேட்பாளர் என்ற இந்த பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது. இரண்டாவதாக இருப்பவர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆரிஃப் முஹம்மது கான். இவர் தற்போதைய கேரள ஆளுநர்.

தமிழிசை சவுந்தரராஜன், மற்றும் ஆனந்திபென் படேல் உட்பட இன்னும் சிலரது பெயர்களும் அடிபட்டாலும் கூட இம்முறை இந்த இரண்டு பேருக்கு மட்டுமே அதிக வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க வட்டாரத்தில் பேசப்படுகிறது. காரணம், சந்தால் பழங்குடியினத்தைச் சேர்ந்த முர்முவை குடியரசுத்தலைவர் பதவிக்கு தேர்வு செய்வதன் மூலம் 6 மாநில சட்டசபைத் தேர்தல் மற்றும் 2024 மக்களவை தேர்தலில் பழங்குடியின வாக்குகளை பெற இது உதவும்.

presidential election of india-மேலும் திரௌபதி முர்மு, பிரதமர் மோடியுடனும் ஜனநாயக கூட்டணி கட்சி உறுப்பினர்களுடனும் நல்ல இணக்கமான நட்பு வைத்திருப்பவரும் கூட.

ஆரிஃப் முஹம்மது கானையும் தேர்வு செய்ய சாத்தியமான சூழ்நிலை உள்ளதாகவும் பா.ஜ.க தரப்பில் கூறப்படுகிறது. நபிகள் குறித்த சர்ச்சை கருத்துக்களால் வளைகுடா நாடுகள் கொதித்துக் கிடக்கின்றன. இதில் கத்தார், இந்தியா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதனால் இந்தியாவுடன் நெருக்கமான உறவில் உள்ள இஸ்லாமிய நாடுகள் கூட இந்தியாவை பகைத்துக்கொள்ளும் நிலை ஏற்படலாம். அதனால் ஒரு இஸ்லாமியரை குடியரசுத்தலைவராக தேர்வு செய்து இஸ்லாமிய நாடுகள் மத்தியில் ஒரு நற்பெயர் எடுப்பதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

அதனால், நம்மைப் பொறுத்தவரை இந்த இரண்டு பேருக்கு மட்டுமே கூடுதல் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Updated On: 10 Jun 2022 12:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்