/* */

எதிர்க்கட்சிகள் வீசி அடிக்கும் சேற்றில் தாமரை மலரும்: பிரதமர் மோடி

தமிழ்நாட்டில் எம்ஜிஆர், கருணாநிதி போன்ற ஜாம்பவான்களின் ஆட்சிகளளை காங்கிரஸ் கலைத்தது என மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி ஆவேசமாக பேசினார்.

HIGHLIGHTS

எதிர்க்கட்சிகள் வீசி அடிக்கும் சேற்றில் தாமரை மலரும்: பிரதமர் மோடி
X

பிரதமர் நரேந்திர மோடி (பைல் படம்).

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாத்திற்கு பதில் அளித்து லோக்சபாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார். அவர் பேச தொடங்கிய போது அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி கடும் அமளியியில் ஈடுபட்டன. அப்போது பேசிய பிரதமர், எவ்வளவு சேற்றை வாரி இறைத்தாலும் தாமரை மலர்ந்து கொண்டு தான் இருக்கும் என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களில் சமஸ்கிருத வார்த்தைகள் இருப்பது சிலருக்கு பிரச்னையாக இருந்தது. காந்தி-நேரு குடும்பத்தின் பெயரில் 600 மத்திய அரசின் திட்டங்கள் இருப்பதாக செய்தித்தாள்களில் படித்தேன். அவர்களுடைய தலைமுறையை சேர்ந்தவர்கள் நேருவை ஏன் குடும்ப பெயராக வைத்துக் கொள்ளவில்லை என்பது எனக்கு புரியவில்லை. இதில் அவர்களுக்கு என்ன பயம்?

எந்த கட்சியை சேர்ந்தவர்கள் 356-வது சட்டப்பிரிவை தவறாக பயன்படுத்தினார்கள்? 90 முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் கவிழ்க்கப்பட்டுள்ளன. ஒரு பிரதமர் 50 முறை 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தியுள்ளார். அந்த பிரதமரின் பெயர் இந்திரா காந்தி. கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசு தேர்வானது. அது நேருவுக்கு பிடிக்கவில்லை. எனவே அங்கு ஆட்சி கலைக்கப்பட்து.

தமிழ்நாட்டிலும் எம்ஜிஆர், கருணாநிதி போன்ற ஜாம்பவான்களின் ஆட்சிகளையும் காங்கிரஸ் கலைத்தது. சரத்பவார் ஆட்சியும் கவிழ்க்கப்பட்டது. என்.டி.ஆர். மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற போது அவரது ஆட்சியை கவிழ்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஒரு நபர் பலரை எப்படி பலமாக எதிர்கொள்கிறார் என்பதை தேசம் கவனித்து வருகிறது. என்னை விமர்சிக்க எதிர்க்கட்சிகளிடம் போதிய வார்த்தைகள் இல்லை. அவர்கள், தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். நான் நாட்டுக்காக வாழ்கிறேன். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

Updated On: 9 Feb 2023 12:15 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...