/* */

உலகளாவிய வளர்ச்சியின் இயந்திரமாக மாறி வரும் இந்தியா: பிரதமர் மோடி

உலகளாவிய வளர்ச்சியின் இயந்திரமாக இந்தியா மாறி வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

உலகளாவிய வளர்ச்சியின் இயந்திரமாக மாறி வரும் இந்தியா: பிரதமர் மோடி
X

விழாவில் பேசிய பிரதமர் மோடி.

மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் இன்று நடைபெற்ற இந்திய ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டைக் குறிக்கும் ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டு தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். ரிசர்வ் வங்கியின் 90-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் நினைவு நாணயத்தையும் திரு மோடி வெளியிட்டார். இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதன் செயல்பாடுகளை 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கியது. இன்று 90 வது ஆண்டில் அது நுழைகிறது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இந்திய ரிசர்வ் வங்கி இன்று 90 ஆண்டுகளை நிறைவு செய்து வரலாற்று மைல்கல்லை எட்டியுள்ளது என்று கூறினார். ரிசர்வ் வங்கி சுதந்திரத்திற்கு முன்பும், பின்பும் பல சகாப்தங்களைக் கண்டுள்ளது என்றும், அதன் தொழில்முறை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் உலகம் முழுவதும் ஒரு அடையாளத்தை உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ரிசர்வ் வங்கி 90 ஆண்டுகளை நிறைவு செய்ததை முன்னிட்டு அனைத்து ஊழியர்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். தற்போதைய ரிசர்வ் வங்கி ஊழியர்கள் அதிர்ஷ்டசாலிகள் என்று கூறிய பிரதமர், இன்று தயாரிக்கப்பட்ட கொள்கைகள் ரிசர்வ் வங்கியின் அடுத்த பத்தாண்டுகளை வடிவமைக்கும் என்று கூறியதுடன், அடுத்த 10 ஆண்டுகள் ரிசர்வ் வங்கியை அதன் நூற்றாண்டுக்கு அழைத்துச் செல்லும் என்றும் குறிப்பிட்டார்.


"வளர்ச்சியடைந்த பாரதத்தின் தீர்மானங்களுக்கு அடுத்த தசாப்தம் மிகவும் முக்கியமானது" என்று பிரதமர் மோடி கூறினார், வேகமான வளர்ச்சியை நோக்கி ரிசர்வ் வங்கியின் முன்னுரிமை, நம்பிக்கை, ஸ்திரத்தன்மையில் கவனம் செலுத்துவதை அவர் எடுத்துரைத்தார். அதன் இலக்குகள் மற்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதற்கு தமது நல்வாழ்த்துக்களையும் பிரதமர் தெரிவித்துக் கொண்டார்.

மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் நாட்டின் பொருளாதாரத்தில் நாணய மற்றும் நிதிக் கொள்கைகளை ஒருங்கிணைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், 2014-ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் 80-வது ஆண்டு கொண்டாட்டத்தை நினைவு கூர்ந்தார். அந்த நேரத்தில் நாட்டின் வங்கி அமைப்பு எதிர்கொண்ட வாராக்கடன் மற்றும் ஸ்திரத்தன்மை போன்ற சவால்கள் மற்றும் பிரச்சினைகளை அவர் நினைவு கூர்ந்தார். அங்கிருந்து தொடங்கி, இன்று இந்திய வங்கி முறை உலகின் வலுவான மற்றும் நீடித்த வங்கி அமைப்பாக பார்க்கப்படும் ஒரு கட்டத்தை நாம் எட்டியுள்ளோம், ஏனெனில் அந்த நேரத்தில் இறந்து போகும் நிலையில் இருந்த வங்கி அமைப்பு தற்போது லாபத்தில் உள்ளதுடன், சாதனை மதிப்பைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.

தெளிவான கொள்கை, நோக்கங்கள் மற்றும் முடிவுகளே இந்த மாற்றத்திற்குக் காரணம் என்று பிரதமர் பாராட்டினார். "நோக்கங்கள் சரியாக இருக்கும் இடத்தில், முடிவுகளும் சரியாக இருக்கும்" என்று பிரதமர் கூறினார். சீர்திருத்தங்களின் விரிவான தன்மை குறித்து பேசிய பிரதமர், அங்கீகாரம், தீர்மானம் மற்றும் மறு மூலதனம் ஆகிய உத்திகளின் அடிப்படையில் அரசு செயல்பட்டு வருவதாகக் கூறினார். பொதுத்துறை வங்கிகளுக்கு உதவுவதற்காக 3.5 லட்சம் கோடி ரூபாய் மூலதன உட்செலுத்துதல் மேற்கொள்ளப்பட்டது. நொடித்துப் போதல் மற்றும் திவால் சட்டம் மட்டும் 3.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களுக்கு தீர்வு கண்டுள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். ரூ.9 லட்சம் கோடிக்கு மேல் தவறிய 27,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஐபிசியின் கீழ் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே தீர்க்கப்பட்டுள்ளன என்றும் அவர் நாட்டிற்கு தெரிவித்தார். 2018 ஆம் ஆண்டில் 11.25 சதவீதமாக இருந்த வங்கிகளின் மொத்த வாராக் கடன் 2023 செப்டம்பரில் 3 சதவீதத்திற்கும் கீழே குறைந்துள்ளது. இரட்டை இருப்புநிலைக் குறிப்புகளின் பிரச்சினை கடந்த காலத்தின் பிரச்சினை என்று அவர் கூறினார்.


இந்த மாற்றத்திற்கு பங்களித்த ரிசர்வ் வங்கியை பிரதமர் மோடி பாராட்டினார்.சர்வ் வங்கி தொடர்பான விவாதங்கள் பெரும்பாலும் நிதி வரையறைகள் மற்றும் சிக்கலான சொற்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும், ரிசர்வ் வங்கியில் மேற்கொள்ளப்படும் பணிகள் சாமானிய குடிமக்களின் வாழ்க்கையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். கடந்த 10 ஆண்டுகளில், மத்திய வங்கிகள், வங்கி அமைப்புகள் மற்றும் கடைசி வரிசையில் உள்ள பயனாளிகளுக்கு இடையேயான தொடர்பை அரசு எடுத்துரைத்துள்ளது என்று கூறிய பிரதமர், ஏழைகளின் நிதி உள்ளடக்கத்திற்கான உதாரணத்தை எடுத்துக்காட்டினார். நாட்டில் உள்ள 52 கோடி ஜன் தன் கணக்குகளில் 55 சதவீதம் பெண்களுடையது என்று அவர் குறிப்பிட்டார். 7 கோடிக்கும் அதிகமான விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் பிரதமரின் கிசான் கடன் அட்டைகளை அணுகும் வேளாண் மற்றும் மீன்வளத் துறையில் நிதி உள்ளடக்கத்தின் தாக்கத்தை அவர் குறிப்பிட்டார். இது கிராமப்புறப் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க உந்துதலைக் கொடுக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் கூட்டுறவுத் துறைக்கு ஏற்பட்டுள்ள ஊக்கம் பற்றிக் குறிப்பிட்ட பிரதமர், கூட்டுறவு வங்கிகள் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி கடைப்பிடித்துள்ள விதிமுறைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். யுபிஐ மூலம் மாதந்தோறும் 1200 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் நடப்பதாகவும், இது உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட தளமாக திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார். மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் குறிப்பிட்ட பிரதமர், கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் புதிய வங்கி முறை, பொருளாதாரம் மற்றும் நாணய அனுபவத்தை உருவாக்க உதவியுள்ளது என்றார்.

அடுத்த 10 ஆண்டுகளில் இலக்குகள் தெளிவுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் போது, ரொக்கமில்லா பொருளாதாரம் கொண்டு வரும் மாற்றங்களை கண்காணிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார். நிதி உள்ளடக்கம் மற்றும் அதிகாரமளித்தல் செயல்முறைகளை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியா போன்ற பெரிய நாட்டின் வங்கித் தேவைகளை வலியுறுத்திய பிரதமர், 'வங்கிச் சேவையை எளிதாக்குவதை' மேம்படுத்தி, குடிமக்களின் தேவைகளுக்கு ஏற்ப பொருத்தமான சேவைகளை வழங்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலின் பங்கை அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் விரைவான மற்றும் நிலையான வளர்ச்சியில் ரிசர்வ் வங்கியின் பங்கை அவர் எடுத்துரைத்தார். வங்கித் துறையில் விதிகள் அடிப்படையிலான ஒழுக்கம் மற்றும் நிதி விவேகமான கொள்கைகளை புகுத்துவதில் ரிசர்வ் வங்கியின் சாதனைகளைக் குறிப்பிட்ட பிரதமர், அரசின் ஆதரவை வங்கிகளுக்கு உறுதிப்படுத்தும் அதே வேளையில், ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க பல்வேறு துறைகளின் தேவைகளை முன்கூட்டியே மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பணவீக்கத்தை இலக்காகக் கொள்ளும் உரிமையை ரிசர்வ் வங்கிக்கு வழங்குவது போன்ற பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை குறிப்பிட்ட பிரதமர், இது தொடர்பாக நிதிக் கொள்கைக் குழுவின் செயல்பாட்டைப் பாராட்டினார். விலை கண்காணிப்பு மற்றும் நிதி ஒருங்கிணைப்பு போன்ற நடவடிக்கைகள் கொரோனா போன்ற கடினமான காலங்களில் கூட பணவீக்கத்தை மிதமான மட்டத்தில் வைத்திருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

"முன்னுரிமைகள் தெளிவாக இருந்தால் ஒரு நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது" என்று பிரதமர் வலியுறுத்தினார். கொவிட் பெருந்தொற்று பரவலின்போது நிதி விவேகத்திற்கு அரசு கவனம் செலுத்தியது. சாதாரண குடிமக்களின் வாழ்க்கைக்கு முன்னுரிமை அளித்தது. இது ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் துன்பத்திலிருந்து வெளிவர வழிவகுத்தது. இன்று நாட்டின் வளர்ச்சிக்கு வேகம் அளித்தது என்பதற்கு அவர் உதாரணம் காட்டினார். "உலகின் பல நாடுகள் தொற்றுநோயின் பொருளாதார அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீள முயற்சிக்கும் நேரத்தில் இந்தியப் பொருளாதாரம் புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது" என்று பிரதமர் கூறினார். இந்தியாவின் வெற்றிகளை உலக அளவில் எடுத்துச் செல்வதில் ரிசர்வ் வங்கியின் பங்கை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். எந்தவொரு வளரும் நாட்டிற்கும் பணவீக்கக் கட்டுப்பாடு மற்றும் வளர்ச்சிக்கு இடையில் சமநிலையை உருவாக்குவது அவசியம் என்ற முக்கியத்துவத்தை எடுத்துரைத்த பிரதமர் மோடி, ரிசர்வ் வங்கி இதற்கு ஒரு முன்மாதிரியாக மாறி, உலகில் ஒரு தலைமைப் பாத்திரத்தை வகிக்க முடியும் என்றும், இதன் மூலம் முழு உலகளாவிய தெற்கு பிராந்தியத்திற்கும் ஆதரவளிக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

இன்று உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு இந்தியா என்று குறிப்பிட்ட பிரதமர், இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் ரிசர்வ் வங்கி முக்கியப் பங்காற்றுவதை சுட்டிக்காட்டினார். நாட்டில் புதிய துறைகளை திறந்து விட்டதன் மூலம் இன்றைய இளைஞர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை உருவாக்கியுள்ள அரசின் கொள்கைகளுக்கு அவர் நன்றி தெரிவித்தார். பசுமை எரிசக்தித் துறைகளின் விரிவாக்கத்தை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், சூரிய சக்தி, பசுமை ஹைட்ரஜன் மற்றும் எத்தனால் கலப்பு பற்றியும் பேசினார். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத் துறையில் அதிகரித்து வரும் ஏற்றுமதி குறித்தும் அவர் பேசினார். இந்தியாவின் உற்பத்தித் துறையின் முதுகெலும்பாக எம்.எஸ்.எம்.இ-க்கள் மாறுவது குறித்து பேசிய பிரதமர், கொவிட் பெருந்தொற்று பரவலின் போது எம்.எஸ்.எம்.இ.க்களுக்கு ஆதரவளிக்க கடன் உத்தரவாதத் திட்டம் செயல்படுத்தப்பட்டதை எடுத்துரைத்தார். புதிய துறைகளுடன் தொடர்புடைய இளைஞர்களுக்கு கடன் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

21 ஆம் நூற்றாண்டில் புத்தாக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், குழுக்களுடன் அதிநவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் பணிக்கு ஆட்களை அடையாளம் காண்பது தொடர்பாக வரவிருக்கும் முன்மொழிவுகளுக்கு தயாராக இருக்குமாறு கேட்டுக் கொண்டார். விண்வெளி மற்றும் சுற்றுலா போன்ற புதிய மற்றும் பாரம்பரிய துறைகளின் தேவைகளுக்கு வங்கியாளர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். வரும் ஆண்டுகளில், அயோத்தி உலகின் மிகப்பெரிய மத சுற்றுலா மையமாக மாறப் போகிறது என்ற வல்லுநர்களின் கருத்தை அவர் குறிப்பிட்டார்.

சிறு வணிகர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளின் நிதித் திறனில் வெளிப்படைத்தன்மையை உருவாக்கியுள்ள நிதி உள்ளடக்கம் மற்றும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்காக அரசு மேற்கொண்ட பணிகளை பிரதமர் பாராட்டினார். "இந்தத் தகவல் அவர்களுக்கு நிதி ரீதியாக அதிகாரம் அளிக்கப் பயன்படுத்தப்பட வேண்டும்" என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

உலகளாவிய பிரச்சினைகளின் தாக்கத்தைத் தணிக்கும் வகையில் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார தற்சார்பை அதிகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். "இன்று, உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவீத பங்களிப்புடன், இந்தியா உலக வளர்ச்சியின் இயந்திரமாக மாறி வருகிறது" என்று திரு மோடி குறிப்பிட்டார். ரூபாய் பயன்பாட்டை உலகம் முழுவதும் எளிதில் அணுகக்கூடியதாகவும், ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் மாற்றுவதற்கான முயற்சிகளை அவர் வலியுறுத்தினார். அதிகப்படியான பொருளாதார விரிவாக்கம் மற்றும் அதிகரித்து வரும் கடன் ஆகியவற்றின் போக்குகளையும் அவர் சுட்டிக்காட்டினார், மேலும் பல நாடுகளின் தனியார் துறை கடன் அவற்றின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை இரட்டிப்பாக்கியுள்ளது என்று சுட்டிக்காட்டினார். பல நாடுகளின் கடன் அளவுகளும் உலகில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று அவர் கூறினார். இந்தியாவின் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை மனதில் கொண்டு இது குறித்து ஆய்வு நடத்த ரிசர்வ் வங்கிக்கு பிரதமர் ஆலோசனை தெரிவித்தார்.

நாட்டின் திட்டங்களுக்கு தேவையான நிதியை வழங்குவதற்கு வலுவான வங்கித் துறையின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார். செயற்கை நுண்ணறிவு மற்றும் பிளாக் செயின் போன்ற தொழில்நுட்பங்கள் கொண்டு வந்துள்ள மாற்றங்களைக் குறிப்பிட்ட அவர், வளர்ந்து வரும் டிஜிட்டல் வங்கி அமைப்பில் இணைய பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். புதிய நிதி, இயக்கம் மற்றும் வணிக மாதிரிகள் தேவைப்படும் என்பதால், நிதி-தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளின் வெளிச்சத்தில் வங்கி அமைப்பின் கட்டமைப்பில் தேவையான மாற்றங்கள் குறித்து சிந்திக்குமாறு பார்வையாளர்களை அவர் கேட்டுக்கொண்டார். "உலகளாவிய சாம்பியன்களின் கடன் தேவைகளை தெருவோர வியாபாரிகளுக்கும், அதிநவீன துறைகளிலிருந்து பாரம்பரிய துறைகளுக்கும் பூர்த்தி செய்வது வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு முக்கியமானது மற்றும் வளர்ச்சியடைந்த பாரதத்தின் வங்கி தொலைநோக்கை முழுமையாக பாராட்டுவதற்கு ரிசர்வ் வங்கி பொருத்தமான அமைப்பாகும்" என்று பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

மகாராஷ்டிர ஆளுநர் ரமேஷ் பெய்ன்ஸ், மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணையமைச்சர்கள் பகவத் கிஷன்ராவ் காரத், பங்கஜ் சவுத்ரி, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Updated On: 1 April 2024 4:41 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  3. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  5. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  6. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  9. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?