/* */

'கருகிய ரொட்டி புடிக்குமா அப்பா..?' அப்துல் கலாம் தந்தையிடம் கேட்ட கேள்வி

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் மனிதர்கள் மீதான நேசிப்பை எங்கு கற்றுக்கொண்டார் என்பதை கூறுகிறார்.

HIGHLIGHTS

கருகிய ரொட்டி புடிக்குமா அப்பா..? அப்துல் கலாம் தந்தையிடம் கேட்ட கேள்வி
X

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.அப்துல் கலாம் சிறு வயதில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்கிறார்.

"நான் குழந்தையாக இருந்தபோது, ​​​​ஒருநாள் என் அம்மா எங்களுக்கு உணவு சமைத்துக்கொண்டிருந்தார். அன்று அவர் நீண்ட நேரம் கடினமான வேலைக்குப் பிறகு அந்த இரவு உணவைச் செய்துகொண்டிருந்தார். ரொட்டிக்கு தொட்டுக்கொள்ள காய்கறி சேர்த்த கூட்டு சிறிதை அம்மா, ஒரு தட்டில் வைத்தார். பின்னர் மிகவும் கருகிப்போன ரொட்டி ஒன்றை இன்னொரு தட்டில் வைத்து என் அப்பாவின் முன் வைத்தார்.

அப்துல் கலாம் சிறுவயதில் அவரது பெற்றோருடன்.

கருகிய ரொட்டியை யாராவது கவனிக்கிறார்களா என்று நான் காத்திருந்தேன். ஆனால், அப்பா தனது ரொட்டியை சாப்பிட்டவாறு, பள்ளிக்கூடத்தில் இன்னிக்கு எப்படி இருந்தது என்று என்னிடம் கேட்டார். அவர் கேட்ட கேள்விக்கு அன்று இரவு நான் அவரிடம் என்ன பதில் சொன்னேன் என்பது எனக்கு நினைவில் இல்லை. ஆனால், அதே இரவு அம்மா கருகிய ரொட்டிக்காக அப்பாவிடம் மன்னிப்பு கேட்டதை நானும் கேட்டுக்கொண்டிருந்தேன்.அது எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.

அதற்கு அப்பா கூறிய பதிலை என்னால் மறக்கவே முடியாது: "என்னம்மா அப்பிடி கேட்டுட்டே? எனக்கு கருகிய ரொட்டி ரொம்பப் பிடித்திருந்தது." என்றார். அம்மா மகிழ்ச்சியோடு படுக்கச்சென்றார். அன்று இரவு, நான் அப்பாவை முத்தமிடச் சென்றேன். இரவு வணக்கம் கூறிவிட்டு, 'அப்பா, உங்களுக்கு கருகிய ரொட்டி பிடிக்குமா?' என்று கேட்டேன்.

அப்போது அவர் என்னை தனது கைகளில் கட்டிப்பிடித்து,'உங்கள் அம்மா இன்று நீண்ட நேரம் ஒரு கஷ்டமான வேலை செய்தார். அதனால் அவர் மிகவும் சோர்வாக இருந்தார். மேலும், கருகிய ரொட்டி கடுமையான வார்த்தைகளைப் போல வேறு யாரையும் காயப்படுத்தாது.' என்றார், கண்ணை சிமிட்டியவாறு. அப்பாவின் வார்த்தைகளில் இருந்த பொருள் அப்போது புரியாவிட்டாலும் இப்போது உணரமுடிகிறது.

'மகனே, வாழ்க்கை முழுமையற்ற பொருட்களாலும், நிறைவற்ற மனிதர்களாலும் நிறைந்தது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்றார் என் அப்பா. அந்த வார்த்தைகள் பல ஆண்டுகள் கடந்தும் என் நினைவில் நிற்கிறது. "ஒருவருக்கொருவர் தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். உறவுகளைக் கொண்டாடத் தெரிந்திருக்க வேண்டும்" என்பதை என் தந்தை மூலம் கற்றுக்கொண்டேன் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார். பண்பு எங்கிருந்து அவருக்கு தொடங்கியது என்பதை நம்மாலும் உணர முடிகிறது.

Updated On: 6 March 2022 7:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  2. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  3. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  4. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  5. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  7. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  8. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  9. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  10. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...