/* */

இந்தியாவில் கொரோனா 4-வது அலை இன்னும் வரவில்லை: ஐசிஎம்ஆர் இயக்குநர் தகவல்

இந்தியாவில் கொரோனாவின் 4-வது அலை இன்னும் உருவாகவில்லை, சில பகுதிகளில் மட்டுமே பாதிப்பு அதிகரித்துள்ளது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குநர் டாக்டர் சமிரன் பாண்டா

HIGHLIGHTS

இந்தியாவில் கொரோனா 4-வது அலை இன்னும் வரவில்லை: ஐசிஎம்ஆர் இயக்குநர் தகவல்
X

இந்தியாவில் கொரோனாவின் 4-வது அலை இன்னும் உருவாகவில்லை, சில பகுதிகளில் மட்டுமே பாதிப்பு அதிகரித்துள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) இயக்குநர் டாக்டர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று ஆயிரத்துக்கும் கீழ் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி பாதிப்பு 4 ஆயிரத்தை தொட்டுள்ளது. டெல்லி, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.இதனால் 4-வது அலை தொடங்கி விட்டதோ என்ற அச்ச உணர்வு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐசிஎம்ஆர் கூடுதல் இயக்குநர் டாக்டர் சமிரன் பாண்டா நேற்று கூறியதாவது: "தினசரி கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. எனினும், இது குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே இது அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் பரவலாக பாதிப்பு ஏற்படவில்லை. இதுவரை கொரோனா 4-வது அலைக்கான அறிகுறி ஏற்படவில்லை.

கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்படுவோரில் தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம்அதிகரித்து வருவது உண்மைதான். ஆனால், சோதனை செய்யப்படுவோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதுதான் இதற்குக் காரணம். உதாரணமாக டெல்லியில் கொரோனா சோதனையை அதிகரித்த பிறகு, தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 7-லிருந்து 5 சதவீதமாகக் குறைந்துள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

Updated On: 2 May 2022 4:48 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  3. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  4. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  5. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  6. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  7. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  8. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  9. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  10. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்