/* */

லாலா லஜபதிராய் பிறந்தநாள்- பிரதமர் புகழாரம்

லாலா லஜபதி ராய் பிறந்த நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

1865 ம் ஆண்டு , ஜன. 28ல் பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் துடிகே என்ற கிராமத்தில் பிறந்தவர் லாலாலஜபதிராய். சட்டம் பயின்ற இவர் நாட்டு விடுதலைக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்தார். லாஹூரில் (தற்போதைய பாகிஸ்தானில் உள்ளது) இருந்தபடி தனது எழுத்தாலும் பேச்சாலும் ஆங்கில ஆட்சிக்கு எதிராக மக்களை அணி திரட்டியவர். இத்தகைய சிறப்பு வாய்ந்த லாலா லஜபதி ராய் பிறந்தநாளில் பிரதமர் மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இது குறித்து பிரதமர் விடுத்துள்ள சுட்டுரையில், மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரரான, பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராயின் பிறந்த நாளான இன்று அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்களிப்பு அளப்பரியது. தலைமுறைகள் தாண்டியும் மக்களை ஊக்குவித்துக் கொண்டு இருக்கிறது. அந்த அரும்பெரும் தலைவரின் பிறந்தநாளில் அவரை நினைவு கூறுவோம் என்று கூறியுள்ளார்.

Updated On: 28 Jan 2021 6:57 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  2. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  4. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  5. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  6. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  7. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  8. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!