/* */

பிப். 1 முதல் எந்த வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு? அமைச்சர் தகவல்

தமிழகத்தில் பிப்ரவரி 1ம் தேதி முதல், பள்ளிகள் திறக்க, அரசுக்கு பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைத்துள்ளது.

HIGHLIGHTS

பிப். 1 முதல் எந்த வகுப்புகளுக்கு பள்ளி திறப்பு? அமைச்சர் தகவல்
X

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. எனினும், பொதுத்தேர்வு எழுதும் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. எனினும், ஒமிக்ரான் பரவலால், பொங்கல் விடுமுறைக்கு பின்னர், ௧௦ - 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை நீட்டிக்கப்பட்டது.

அதன்படி, வருகிற 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, பல மாவட்டங்களில் தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், வரும் 31ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், பிப்ரவரியில் பள்ளிகளை திறக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அதன்படி, பிப்ரவரி முதல், 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறக்கப்படுவது உறுதியாகி உள்ளது.

எனினும், ஒன்றாம் வகுப்பு முதல், 8ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு, பள்ளிகளை திறப்பது குறித்து, முதலமைச்சர் முடிவெடுப்பார் என்று கூறப்படுகிறது.

Updated On: 27 Jan 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’