/* */

எளிய குறள் அறிவோம் எல்லோரும் வாங்க..!

திருக்குறளில் சொல்லப்படாத கருத்துக்களே கிடையாது. அத்தனை கருத்துக்களும் காலத்துக்கு ஏற்ப இன்றளவும் பொருந்திப்போவதே நூலின் சிறப்பு.

HIGHLIGHTS

எளிய குறள் அறிவோம் எல்லோரும்  வாங்க..!
X

easy thirukkural in tamil-திருக்குறள் (கோப்பு படம்)

Easy Thirukkural in Tamil

உலகின் மூத்த மொழியான தமிழ் மிக பழமையான மொழிகளில் ஒன்றாக விளங்குகிறது. தமிழ் மொழியில் தற்கால சமுதாயத்திற்கும் பொருந்தும் வகையிலான நற்கருத்துக்கள் பொருந்திய பல நூல்கள் நமது முன்னோர் காலத்தில் இயற்றப்பட்டுள்ளன. அத்தகைய சிறந்த நூல்களில் ஒன்று தான் “திருக்குறள்”. திருக்குறள் நூலில் உள்ள எளிமையான திருக்குறள் மற்றும் அதன் பொருளை அறிந்துகொள்வோம் வாங்க.

Easy Thirukkural in Tamil

1. அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்

புன்கண்ணீர் பூசல் தரும்

விளக்கம்: நம்மிடம் தோன்றும் அன்பை அடைத்து வைக்க பூட்டு என்று எதுவுமில்லை. சக மனிதரின் துன்பம் கண்டபொழுது, நம் கண்களில் கண்ணீர் பெருகுவதே நாம் உள்ளத்தில் கொண்டிருக்கும் அன்பை பறைசாற்றும் சிறந்த ஆதாரமாக இருக்கிறது.

2. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்

விளக்கம்:கேட்கும் அனைவரும் வெறுக்கத்தக்க படியான பயன்தராத சொற்களை தொடர்ந்து பேசுபவன், அறிவிற் சிறந்த மக்களால் மட்டுமல்லாமல் எல்லோராலும் இகழப்பட்டு, வெறுக்கப்படுவான்.

3. ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு

Easy Thirukkural in Tamil

விளக்கம்: இந்த உலகில் நீங்களும் வாழும் காலம் வரை கொடை எனப்படும் தானம் செய்யுங்கள். அப்படி தானம் செய்வதால் புகழ் பெற்று வாழுங்கள். பிறருக்கு தானம் செய்வதால் ஏற்படும் புகழ் மட்டுமே ஒரு உயிருக்கு இந்த பூமியில் கிடைக்கக் கூடிய சிறந்த ஊதியமாக இருக்குமே தவிர, மற்ற எதுவும் இல்லை.

4. வாய்மை எனப்படுவது யாதுஎனின் யாதுஒன்றும்

தீமை இலாத சொலல்

விளக்கம்: அனைவராலும் உயர்ந்ததாக சிறப்பித்து கூறப்படும் வாய்மை என்பது யாதெனில், பிற எந்த உயிருக்கும் சிறிதும் தீங்கு தராத வகையிலான சொற்களை சொல்லுவதே ஆகும். அப்படி பிற உயிர்களுக்கு தீங்கு தரும் சொல்லாக இருக்குமேயானால் சொல்லப்படுகின்ற வாய்மையும், பொய்யாகவே கருதப்படும்.

5. சிறப்புஈனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா

செய்யாமை மாசுஅற்றார் கோள்

Easy Thirukkural in Tamil

விளக்கம்: தீமையான செயல் செய்வதால் வாழ்க்கைக்கு பல சிறப்புகளை தருகின்ற மிகப் பெரும் செல்வம் கிடைப்பதாக இருந்தாலும், பிறருக்கு தீமை செய்யாமல் வாழ்வது என்கிற உயரிய கொள்கையை கொண்டு வாழ்வார்கள் மேல் மக்கள்.

6. கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக

விளக்கம்: ஒருவன் பெருமுயற்சி செய்து சிறந்த நூல்களை சேகரித்து, அந்த நூல்களில் இருக்கின்ற கருத்துக்கள் தெளிவாக புரியும் வகையில் நன்கு கற்க வேண்டும். நன்கு கற்றறிந்த பின், அந்த நூல்களில் கூறப்பட்டிருக்கும் நல் வழிகளை பின்பற்றி வாழ்வில் நிலைபெற வேண்டும்.

7. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும்

விளக்கம்: ஒருவரிடம் இருக்கும் அடக்கமானது அவரை உயர்த்தி இறைவனடி சேர்க்கும், அடக்கம் இல்லாத மாந்தர் வாழ்வில் பல துன்பங்களை அடைவார்.

Easy Thirukkural in Tamil

8. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்

விளக்கம்: மலர் போன்ற மனத்தில் நிறைந்த கடவுளை பின்பற்றுவோரின் புகழ் உலகில் நெடுங்காலம் வரை நிலைத்து நிற்கும்.

9. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்

விளக்கம்: அடக்கத்துடன் இருப்பது தான் அறிவுடைமை என்று அறிந்து வாழ்ந்தால் அந்த அடக்கம் நற்பண்பு உள்ளவர்களால் அறியப்பட்டு அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.

Easy Thirukkural in Tamil

10. எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு

விளக்கம்: எந்த விதமான தீமைகளை செய்தவருக்கும் அந்த தீமையில் இருந்து விடுபடுவதற்கான வழி இருக்கும், ஆனால் ஒருவர் செய்த நன்மையை மறந்தவருக்கு அந்த பாவத்தில் இருந்து விடுபடுவதற்கான வழி கிடையாது

11.பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது

விளக்கம்: எந்த ஒரு பயனையும் எதிர்பார்க்காமல் ஒருவர் செய்யும் உதவி கடலை விட பெரியதாக இருக்கும்.

12. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு

Easy Thirukkural in Tamil

விளக்கம்: தீயினால் சுட்ட புண் தோலின் மேற்புறத்தில் வடுவாக இருந்தாலும் அந்த புண் ஆறி விடும், ஆனால் ஒருவன் பேசிய தீய சொற்கள் அவன் வாழும் காலம் வரை ஆறாது.

13. நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று

விளக்கம்: ஒருவர் செய்த நன்மையை எப்பொழுதும் மறக்க கூடாது; அவன் செய்த தீமையை உடனே மறப்பது நல்லது.

14. அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள.

விளக்கம்: இந்த உலகில் கிடைக்க கூடிய செல்வங்களுள் அறிய செல்வமானது உயர்ந்த மனிதர்கள் தங்களின் மனதை எப்போதும் ஆளும் “அருள்’ எனப்படும் செல்வமே ஆகும். மற்றபடி அழிந்து போகும் நிலையற்ற பொருட் செல்வங்கள் இந்த உலகில் இழிவான மனிதர்களிடம் கூட இருக்கின்றன.

Easy Thirukkural in Tamil

15. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு

விளக்கம்: எந்த கருத்தை யார் சொன்னாலும் அந்த கருத்தில் உள்ள உண்மையைக் காண்பது அறிவு.

Updated On: 16 April 2024 9:25 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?