/* */

பிசியோதெரபி சிகிச்சையால் கிடைக்கும் நன்மைகள்

மூட்டுப் பகுதிகளை ஒன்றிணைக்கவும், எலும்பு முறிவு காயங்களுக்கும் பிசியோதெரபிதான் பரிந்துரைக்கப்படுகிறது.

HIGHLIGHTS

பிசியோதெரபி சிகிச்சையால் கிடைக்கும்  நன்மைகள்
X

பிசியோதெரபி - கோப்புப்படம் 

விபத்தில் சிக்கியோ, நிலைதடுமாறி கீழே விழுந்தோ உள் உறுப்புகளில் ஏற்படும் வலியை போக்குவதற்கு `பிசியோதெரபி' சிகிச்சை முறை உதவுகிறது. கடுமையான காயம் அல்லது நாள்பட்ட நோய் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதிலும் பிசியோதெரபிக்கு முக்கிய பங்குண்டு.

நோய் அல்லது காயத்திலிருந்து மீள்வதற்கான பொதுவான வழிகளில் ஒன்று பிசியோதெரபி. பிசியோதெரபி நாள்பட்ட வலி , கார் விபத்துக்கள் அல்லது விளையாட்டு காயங்கள் மற்றும் நகரும் பிரச்சனைக்கு உதவும் . உங்கள் பிசியோதெரபியைத் தொடர்வது மிகவும்

பிசியோதெரபிஸ்டுகள் பிரச்சனைகளைத் தடுப்பது மற்றும் மக்கள் நலமடைய உதவுவது ஆகிய இரண்டிலும் வேலை செய்கிறார்கள். காயம், நோய் அல்லது இயலாமையால் ஏற்படும் பிரச்சனைகளை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். இங்கே சில உதாரணங்கள்:

  • தசை மற்றும் எலும்பு தொடர்பான பிரச்சினைகள் அனைத்து முதுகு மற்றும் கழுத்து அசௌகரியத்தின் வேர்கள்.
  • எலும்பு, மூட்டு, தசை மற்றும் தசைநார் பிரச்சனைகள், கீல்வாதம் அல்லது துண்டிப்பின் விளைவுகள் போன்றவை.
  • ஆஸ்துமா போன்ற நுரையீரல் பிரச்சனைகள்.
  • இதய பிரச்சினைகள் உங்களை வேலை செய்ய முடியாமல் போகலாம்.
  • பிரசவம் சிறுநீர்ப்பை அல்லது குடல் போன்ற பிரச்சனைகளை இடுப்புப் பகுதியில் ஏற்படுத்தும்.
  • தலை அல்லது முதுகெலும்பு காயங்கள் அல்லது பார்கின்சன் மற்றும் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற நோய்களால் ஏற்படும் இயக்கம் இழப்பு.
  • சோர்வு, வலி, வீக்கம், விறைப்பு மற்றும் தசை வலிமை இழப்பு.

பிசியோதெரபி சிகிச்சை மூலம் கிடைக்கும் முக்கியமான நன்மைகள் குறித்து பார்ப்போம்.

வலி குறையும்:

கை மற்றும் கால் மூட்டு பகுதிகள் மற்றும் மென்மையான திசு பகுதிகளில் ஏற்படும் வலியை போக்குவதற்கு பிசியோதெரபி உதவும். விபத்தில் சிக்கி காயமடைந்திருக்கும் மூட்டுப் பகுதிகளை ஒன்றிணைக்கவும் பிசியோதெரபி அவசியம் தேவைப்படும். மற்ற காயங்களால் ஏற்படும் வலியை போக்கவும் மருத்துவர்களின் ஆலோசனையின்படி பிசியோதெரபி சிகிச்சை முறையை பின்பற்றலாம். கடுமையான மற்றும் நாள்பட்ட வலியால் சிரமப்பட்டாலோ அல்லது மீண்டும் மீண்டும் வலியை அனுபவித்தாலோ பிசியோதெரபி சிகிச்சை தான் சரியான தீர்வாக அமையும்

நரம்பியல் கோளாறுகள்

பிசியோதெரபி பக்கவாதம் மற்றும் பார்கின்சன் நோயாளிகள் காயத்திலிருந்து மீட்க உதவுகிறது. உங்கள் பிசியோதெரபி சிகிச்சைகள் நடை, இயக்கம் மற்றும் பலவீனம் குறைபாடுகளை ஈடுசெய்யும், செயல்பாட்டை மீட்டெடுக்கும் மற்றும் எதிர்கால சீரழிவைத் தவிர்க்கும்.

கடுமையான காயம்:

எலும்பு முறிவு போன்ற கடுமையான காயங்களுக்கு பிசியோதெரபிதான் பரிந்துரைக்கப்படுகிறது. அது கால்களையும், மூட்டு பகுதிகளையும் ஒருங்கிணைத்து இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு வழிவகுக்கிறது. உடலின் உள் பகுதியில் இருக்கும் வலியை கூட படிப்படியாக குணப்படுத்திவிடும் வல்லமை இதற்கு உண்டு.

தலைவலி:

தலைவலியால் அடிக்கடி அவதிப்படுபவர்கள் பிசியோதெரபி சிகிச்சை முறையை தேர்ந்தெடுக்கலாம். குறிப்பாக ஒற்றை தலைவலியை நிரந்தரமாக போக்குவதற்கு துணை புரியும். உடலில் ரத்த ஓட்டம் சீராக செல்வதற்கும், மன அழுத்தத்தை குறைப்பதற்கும் உதவி செய்யும். இந்த இயற்கையான முறை ஹார்மோன்கள் சீராக செயல்படவும் துணைபுரியும்.

அறுவை சிகிச்சை:

முதியோர்கள் உள்பட அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாதவர்கள் மாற்று முறை சிகிச்சையாக பிசியோதெரபியை முயற்சிக்கலாம். இது அறுவை சிகிச்சையை போல் வேகமாக குணப்படுத்தாது. ஆனாலும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு ஏற்றதாக அமைந்திருக்கும். சிலருக்கு அறுவை சிகிச்சையும், பிசியோதெரபி சிகிச்சையும் தேவைப்படலாம். எந்த வகை சிகிச்சை செய்தாலும் முழுமையாக குணமடைந்த பிறகு பிசியோதெரபி செய்வது உடல் நலனுக்கு நல்லது.

விளையாட்டு:

பொதுவாக விளையாட்டு வீரர்கள் பயிற்சியின்போதோ, போட்டியின்போதோ காயங்கள் ஏற்பட்டு அவதிப்படுவதுண்டு. குறிப்பாக முழங்கை, விலா எலும்புகள், மூட்டு பகுதிகள் காயம் அடைவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. அவர்களுக்கு பிசியோதெரபிதான் காயங்களை குணப்படுத்தி நிரந்தர தீர்வை அளிக்கும்.

நீரிழிவு:

நீரிழிவு நோயாளிகள் சில சமயங்களில் முழங்கால்கள், தோள்பட்டை, கழுத்து, முதுகு வலியால் அவதிப்பட நேரிடும். ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது இந்த பிரச்சினை ஏற்படும். இத்தகைய வலியை கட்டுப்படுத்த சில பிசியோதெரபி பயிற்சிகள் உதவும்.

Updated On: 5 Feb 2024 7:35 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  2. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  3. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  4. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  5. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  6. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  7. தமிழ்நாடு
    22 மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு
  8. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  9. வீடியோ
    🔴LIVE : வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வோருக்கு மத்திய அமைச்சர்...
  10. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!