/* */

ஒமிக்ரானை தடுக்க இரவில் முழு ஊரடங்கு: அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்

ஒமிக்ரான் தொற்று பரவலை தடுக்கும் வகையில், நாட்டில் முதல் மாநிலமாக, மத்தியப் பிரதேசத்தில் இரவு நேர முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

HIGHLIGHTS

ஒமிக்ரானை தடுக்க இரவில் முழு ஊரடங்கு: அறிவிப்பு வெளியிட்ட முதல்வர்
X

கோப்பு படம் 

அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலத்தில், இரவு 11 முதல், காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தில் இதுவரை ஒமிக்ரான் தொற்று கண்டறியப்படவில்லை என்ற போதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள், கலாச்சார நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், பொது இடங்களுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், ஒமிக்ரானுக்காக இரவு நேர ஊரடங்கை பிறப்பித்த முதல் மாநிலம் மத்திய பிரதேசம் ஆகும்.

Updated On: 24 Dec 2021 2:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...