/* */

Siragadikka Asai முத்துவின் டிவிஸ்ட்..! சந்தோஷத்தில் விஜயா..இப்படி ஒரு திருப்பமா?

சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

HIGHLIGHTS

Siragadikka Asai முத்துவின் டிவிஸ்ட்..! சந்தோஷத்தில் விஜயா..இப்படி ஒரு திருப்பமா?
X

சிறகடிக்க ஆசை - இன்றைய எபிசோட் (2024-04-04)

தீம்: குடும்ப மோதல்கள், கர்ப்பம், மர்மம்

கதாபாத்திரங்கள்:

விஜயா - கண்டிப்பான மாமியார்

மீனா - அனுபவம் வாய்ந்த மருமகள்

முத்து - விஜயாவின் கணவர்

அண்ணாமலை - முத்துவின் தந்தை

ரோகிணி - மனோஜின் மனைவி மற்றும் கர்ப்பிணி

மனோஜ் - ரோகிணியின் கணவர்

கதை சுருக்கம்:

விஜயா, மீனாவையும் முத்துவையும் வீட்டை விட்டு வெளியேற சொல்கிறார்.

அண்ணாமலை விஜயாவை சமாதானம் செய்கிறார்.

ரோகிணி வாந்தி எடுப்பதை பார்த்து விஜயா கர்ப்பம் பற்றி சந்தேகப்படுகிறார்.

அண்ணாமலை ரோகிணியை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து செல்கிறார்.

விஜயா, மீனாவை திட்டி விட்டு செல்கிறார்.

விரிவான காட்சிகள்:

விஜயா, மீனாவையும் முத்துவையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்கிறார். முத்து சரி என்று கூறி விட்டு அண்ணாமலையையும் உடன் வர சொல்கிறார். ”ஆமா பா நீ 30 வருஷத்துக்கு மேல இவங்க கிட்ட தண்டனைய அனுபவிச்சிட்ட. வா போலாம்” என்கிறார். ”நீங்க ஏன்பா போறிங்க” என மனோஜ் கேட்கிறார். அதற்கு அண்ணாமலை ”விஜயா என்னைக்குமே இவன தான் புள்ளையா பார்த்ததே இல்லை. உங்க புள்ள, உங்க புள்ளனு தான் சொல்லுவா? என் புள்ள கூப்டா நான் போய் தானே ஆகனும் ” என சொல்கிறார்.

”இப்போ நீ முத்துவ வெளியே போக சொன்னினா நானும் போயிடுவேன். இப்போ நான் போகணுமா? இருக்கணுமா?” என அண்ணாமலை கேட்கிறார். ”இங்க என்னைக்கு என் பேச்சுக்கு மரியாதை இருந்து இருக்கு எதாவது பண்ணுங்க” என சொல்லி விட்டு விஜயா செல்கிறார். அண்ணாமலை விஜயாவை சமாதானம் செய்து சாப்பிட வைக்கிறார். ”ரெண்டு பெரிய வீட்டு மருமகள நான் தான் கூட்டிக்கிட்டு வந்தேன்” என விஜயா சொல்கிறார்.

”ரோகிணி அப்பா வந்து இருந்தா அவரு கிட்டயும் நம்ம மரியாதை போயிருக்கும்” என விஜயா சொல்கிறார். பின் ”ஆமா ரோகிணி உன் அப்பா எங்க அவரு ஏன் இன்னும் வர்ல” என கேட்கிறார் விஜயா. ”நிஜமாவே அவரு வரேனு சொன்னாரா இல்ல நீ சும்மா சொன்னியா?” என விஜயா கேட்கிறார். உடனே ரோகிணி ஓடிப்போய் வாந்தி எடுக்கிறார். ”ஏங்க எல்லாம் நல்ல விஷயம் தாங்க நம்ம வீட்டுக்கு வாரிசு வரப்போகுது” என விஜயா சொல்கிறார். ரோகிணி, ”ஆண்டி அந்த மாதிரி எதுவும்” என எதையோ சொல்ல வாயெடுக்கிறார். ”எனக்கு தெரியாதா? ”என விஜயா சொல்கிறார். பின் ரோகிணி மனோஜிக்கு விஜயா இனிப்பு ஊட்டி விடுகிறார்.

உடனே அண்ணாமலை ரோகிணியை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் சென்று கற்பத்தை உறுதி செய்ய சொல்கிறார். ”நான் சொன்னத தாங்க டாக்டரும் சொல்ல போறாரு” என விஜயா சொல்கிறார். மனோஜும், ரோகிணியும் விழித்துக் கொண்டு நிற்கின்றனர். பின் மனோஜ் ரோகிணியை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்கிறார். பின் விஜயா, மீனாவை பார்த்து அவங்க அவங்க எண்ணத்துக்கு ஏத்த மாதிரி தான் எல்லாம் நடக்குது என சொல்லி விட்டு செல்கிறார். இதனால் மீனா வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது.

முடிவுரை:

இன்றைய எபிசோட் குடும்ப மோதல்கள், கர்ப்பம் மற்றும் மர்மம் ஆகியவற்றை மையமாக கொண்டு பரபரப்பாக நகர்கிறது. அடுத்த எபிசோடில் ரோகிணியின் கர்ப்பம் பற்றிய உண்மை வெளிப்படுமா என்பதை பார்க்கலாம்.

Updated On: 4 April 2024 3:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?