ஷாலினி அஜித்தின் தங்கை ஷாம்லியுடன் இணைந்த கார்த்தி
Karthi And Shamlee Social Work- கார்த்தியும் ஷாம்லியும் சமூகநலத் தொண்டு குறித்த விழிப்புணர்வில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
HIGHLIGHTS
Karthi And Shamlee Social Work-கார்த்தியும் ஷாம்லியும் சமூகநலத் தொண்டு குறித்த விழிப்புணர்வில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த பல பிரபலங்கள் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நடிகர் கார்த்தியும் நடிகை ஷாம்லியும் கழிவு மேலாண்மைக்கு கைகோர்த்துள்ளதாக தெரிகிறது.
நடிகை ஷாம்லி, அஜித் குமாரின் மனைவியான நடிகை ஷாலினியின் தங்கை ஆவார். இவர் சிறுவயதில் மணிரத்னத்தின் 'அஞ்சலி', ராம நாராயணனின் 'துர்கா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர். நடிப்பைத் தவிர, ஷாம்லி ஒரு திறமையான கலைஞரும் ஆவார், மேலும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது கலைப் படைப்புகளை அடிக்கடி வெளியிடுகிறார். சமூக சேவை விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கார்த்தி, தனக்கு தனது அம்மா பத்து வயதாக இருக்கும் போது கொடுத்த கிடாரை ஷாமிலியிடம் நன்கொடையாக கொடுத்த கிடாரில் ஒரு அழகிய ஓவியம் வரைந்து ஷாம்லி அதை கலைப்பொருளாக மாற்றியுள்ளார்.
karthi social services
இதுகுறித்து பகிரப்பட்ட ஒரு வீடியோவில், கார்த்தி ஷாம்லியின் நேரத்தையும் முயற்சியையும் பாராட்டினார். மேலும் மேற்கூறிய சமூக காரணத்திற்காக தனது குழந்தைப் பருவத்தில் அவரது தாயார் அவருக்குக் கொடுத்த விலைமதிப்பற்ற கிடாரைத் தருவதாகக் கூறினார். இந்த கருவி அக்டோபர் 31 ஆம் தேதி வரை ஏலத்தில் விடப்படும் என்றும், பெறப்பட்ட வருமானம் விழிப்புணர்வு காரணத்திற்காகவும் செல்லும் என்று தெரியவந்துள்ளது.
குழந்தை பருவ நினைவுகளை நினைவு கூர்ந்த கார்த்தி, "சிறுவயதில் அண்ணனின் சைக்கிள் கிடைத்தது, அதை பயன்படுத்திய பிறகு, என் சகோதரிக்கு வழங்கப்பட்டது. அதனால் எதையும் வீணாக வீசியதில்லை. எனக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தபோது, நான் எனக்கு பத்து வயதில் அம்மா பரிசளித்த கிட்டார் ஞாபகம் வந்தது.அப்போது கிட்டார் கற்க ஆரம்பித்தேன், ஆனால் அதன் பிறகு அந்தத் தொடுகை போய்விட்டது.ஆனால் அந்த கிட்டார் என்னிடம் எப்போதும் இருந்தது. இப்போது ஷாம்லிக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் நிறைய நேரம் செலவழித்து அதை ஒரு அழகிய கலைப் படைப்பாக மாற்றியுள்ளார்." என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கார்த்தி தனது முந்தைய இரண்டு படங்களான விருமன் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய பிரமாண்ட படங்களின் காரணமாக உயர்ந்த இடத்திற்கு சென்றிருக்கிறார். இப்போது, பொன்னியின் செல்வன் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்ஷ்மண் தயாரித்து, மித்ரன் இயக்கத்தில் வெளியாகவுள்ள இப்படத்தில் ராஷி கண்ணா, ரெஜிஷா விஜயன் மற்றும் சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளிக்கு பிரம்மாண்டமாக அக்டோபர் 21ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2