/* */

கேரளாவில் இயக்கிய முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே அதன் இயக்குநர் மரணம்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பி.சேதுராஜன் . பல்வேறு மலையாளப் படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய இவர் முதல் முறையாக என்டே பிரியதாமம் என்ற படத்தை இயக்கினார்.

HIGHLIGHTS

கேரளாவில் இயக்கிய முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே அதன் இயக்குநர் மரணம்
X

பி.சேதுராஜன் 

தான் இயக்கிய முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே, அதன் இயக்குநர் மரணமடைந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கொரோனா, நாடு முழுவதும் பலருடைய வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த தொற்று சாதாரண மனிதர்களில் இருந்து பெரும் பணக்காரர்கள் வரை யாரையும் விட்டு வைக்கவில்லை. இந்த தொற்றுக்கு பலர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட வர்களும் அதிகம். சினிமா துறையை சேர்ந்தவர்களும் ஏராளமாக இந்த தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் பி.சேதுராஜன் (64). பல்வேறு மலையாளப் படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ள இவர், முதல் முறையாக, 'என்டே பிரியதாமம்' என்ற படத்தை இயக்கினார். பைனான்ஸ் பிரச்னை காரணமாக இந்தப் படம் திடீரென நின்றது. பின்னர் இரண்டு வருடங்களுக்கு முன், படம் முடிந்தது.

ஆனால், கொரோனா காரணமாக படம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகாமல் முடங்கியது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப் படத்தை ரிலீஸ் செய்யும் வேலையில் அவர் இருந்தார். இந்நிலையில், அவருக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தான் இயக்கிய முதல் படம் ரிலீஸ் ஆகும் முன்பே, சேதுராஜன் உயிரிழந்திருப்பது அவர்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் படக்குழுவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் சேதுராஜன் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Updated On: 11 July 2021 11:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’