முன்னணி நடிகைகளுடன் கீர்த்தி சுரேஷ்.. வைரலாகும் புகைப்படங்கள்
keerthy suresh latest photo with top actresses- முன்னணி நடிகைகளுடன் உள்ள கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
HIGHLIGHTS
keerthy suresh latest photo with top actresses- முன்னணி நடிகைகளுடன் உள்ள கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ். இவர் கடந்த 1992ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார்.
கடந்த 2000 ஆண்டுகளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படத்தில் அறிமுகமானார்.
கடந்த 2014ம் ஆண்டு கீதாஞ்சலி படத்தில் நடித்து சிறந்த அறிமுக நடிகைக்கான ஏசியாநெட் விருது, சிறந்த அறிமுக நடிகைக்கான தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது, சிறந்த அறிமுக நடிகைக்கான நானா திரைப்பட விருது, சிறந்த துணை நடிகைக்கான வயலார் திரைப்பட விருது பெற்றார்.
2018 ம் ஆண்டில் மகாநதி படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருது பழம்பெரும் நடிகை சாவித்திரியின் பாத்திரத்தில் நடித்தமைக்காக வழங்கப்பட்டது. சமீபத்தில் மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி படங்களில் நடித்திருந்தார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், தசரா, போலோ ஷங்கர், உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நடிக்கும் சைரன் படத்தில் இணைந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரின் சமூக வலைத்தள பதிவுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உண்டு. தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13.9 மில்லியன் ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார். 1.39 கோடி இன்ஸ்டாகிராம் கணக்கு உடைய ரசிகர்கள் தற்போது கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களாக உள்ளனர்.
தொடர்ந்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வரும் கீர்த்தி சுரேஷ், சமீபகாலமாக கிளாமரான புகைப்படங்களையும் தனது ரசிகர்களுக்கு விருந்தளித்துள்ளார்.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "மிகச்சிறந்த மனிதர்களுடன் மிகச்சிறந்த இரவு" என பதிவிட்டு நடிகைகள் ராதிகா, லிஸி, கல்யாணி பிரியதர்ஷன், அனா பென், பார்வதி திருவொத்து, ரீமா கல்லிங்கல், அதிதி பாலன், ப்ரயகா மார்டின் ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'புதிய துவக்கம்' என பதிவிட்டுள்ளார்.