/* */

பிக் பாஸ் 6 தமிழ் டைட்டில் வின்னர் இவர்தானாம்

கமல்ஹாசன் சொல்வது போல இந்நிகழ்ச்சியில் நாம் எதிர்பார்ப்பது ஒன்றாக இருக்கும் இறுதியில் நடப்பது ஒன்றாக இருக்கும்

HIGHLIGHTS

பிக் பாஸ் 6 தமிழ் டைட்டில் வின்னர் இவர்தானாம்
X

கிட்டத்தட்ட 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. காதல், மோதல், நகைச்சுவை, கோபம் என ஒவ்வொரு போட்டியாளர்களிடமிருந்தும் பல உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளை நாம் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கண்டு ரசித்தோம். வரும் ஜனவரி 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனின் இறுதிப்போட்டி நடைபெறவிருக்கிறது.


இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒவ்வொரு போட்டியாளருக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர், ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தவர் தான் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆகவேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் அனைவரும் எதிர்பார்த்தபடியே நடந்துவிடாது, எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று கமல்ஹாசன் சொல்வது போல இந்நிகழ்ச்சியில் நாம் எதிர்பார்ப்பது ஒன்றாக இருக்கும் இறுதியில் நடப்பது ஒன்றாக இருக்கும்.

அந்த வகையில் தற்போது பலரும் எதிர்பார்த்திடாத வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதியில் ஒரு டிவிஸ்ட் நடக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது தொடர்ந்து பல சர்ச்சையான வார்த்தைகளை கூறியும், உருவக்கேலி செய்தும், எப்போதும் அனைவரிடமும் சண்டை போட்டுக்கொண்டும் இருக்கும் அசீம் தான் பிக்பாஸ்-6 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


அசீமை பிடிக்காதவர்கள் ஒருபுறம் அதிகம் இருந்தாலும், அவர் கேமை உண்மையாக விளையாடுகிறார் என்றும் கேமராவுக்கு முன்னாள் மற்றவர்கள் போல நடிக்கவில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் பலர் கூறி வருகின்றனர். போலியாக இல்லாமல் உண்மையான முறையில் விளையாடி வரும் அசீம் டைட்டில் வின்னர் பட்டத்திற்கு தகுதியானவர் தான் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

பிக்பாஸ்-6 நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்களில் ஒருவராக வந்த அமுதவாணன் ரூ.15 லட்சத்தை பெற்றுக்கொண்டு நிகழ்ச்சியை விட்டு அவராகவே வெளியேறினார். அதனை தொடர்ந்து மற்றொரு இறுதி போட்டியாளரான மைனா நந்தினியும் மிட்வீக் எவிக்சன் மூலம் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப்பட்டார். இப்போது அசீமுடன் களத்தில் ஷிவின் மற்றும் விக்ரமன் இருவரும் உள்ளனர்.

திருநங்கையாக ஷிவினுக்கு ஆரம்பத்திலிருந்தே மக்களிடத்தில் ஆதரவு இருந்து வந்தது. இவர் மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் விதமும், கேம் விளையாடும் விதமும், அசீம் இவரை கேலி செய்தபோது கூட அவர் அதை பொறுமையாக கையாண்ட விதமும் மக்கள் மத்தியில் இவருக்கு செல்வாக்கை ஏற்படுத்தியது. அதேபோல விக்ரமனுக்கும் தனி ரசிகர் கூட்டம் உள்ளது, இவரது அரசியல் கருத்துக்கள் மற்றும் தனிப்பட்ட நியாயமான கருத்துக்களை கேட்கவே பல ரசிகர்கள் உள்ளனர்.


இதுவரைக்கும் வெளியான ப்ரோமோக்களின் அடிப்படையில் விக்ரமன் தான் இந்த சீசன் டைட்டில் வின்னர் என்று ரசிகர்கள் கருத்து கூறுகின்றனர்.

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பதை வைத்து பார்க்கும்போது விக்ரமன் தான் டைட்டில் வின்னர் என்பது நிரூபணம் ஆகிவிட்டது என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். காரணம் இதுவரைக்கும் உள்ளே இருக்கும் ஐந்து போட்டியாளர்களின் ஏவி மற்றும் பிக் பாஸ் பாராட்டு கிடைத்த வரிசையில் கடைசியாக விக்ரமன் தான் இருக்கிறார். விக்ரமனுக்கு தான் டைட்டில் வின்னர் பட்டம், அதனால் தான் அவருடைய ஏவி கடைசியாக காட்டப்பட இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகிறார்கள்.

எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்லும் பிக் பாஸில் கடைசி நேரத்தில் என்ன வேணாலும் மாற்றம் ஏற்படலாம். ஆனாலும் விக்ரமனின் ரசிகர்கள் கண்டிப்பாக விக்கிரமனுக்கு தான் டைட்டில் என்று உறுதியாக கூறி வருகிறார்கள்.

இருப்பினும் யார் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் என்கிற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை, ஞாயிற்றுக்கிழமை தான் யார் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவார்கள் என்பது தெரியவரும்.

Updated On: 21 Jan 2023 6:38 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மே தின விழா கொண்டாட்டம்
  3. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  4. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  5. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  6. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  7. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  8. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  9. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  10. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!