/* */

சினிமா கதைக்களத்தை எங்கிருந்து எடுக்கிறார் ஆர்.செல்வராஜ் தெரியுமா..?

அன்னக்கிளி தொடங்கி தமிழ்த்திரையுலகில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களுக்குக் கதை, வசனம் எழுதியிருப்பவர், ஆர்.செல்வராஜ்,

HIGHLIGHTS

சினிமா கதைக்களத்தை எங்கிருந்து எடுக்கிறார் ஆர்.செல்வராஜ் தெரியுமா..?
X

பாரதிராஜா- சிவாஜி- அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்.

முதல் மரியாதை, சின்னக்கவுண்டர், அலைபாயுதே என தலைமுறைகளைத் தாண்டிப் பயணித்துக் கொண்டிருப்பவர், ஆர். செல்வராஜ். இப்போதும் மணிரத்னத்தின் ஒரு படத்திற்கு எழுதிக்கொண்டிருக்கிறார். அவரது வாசிப்பும், உழைப்பும், அர்ப்பணிப்பும் இணையில்லாதது. இடைவிடாத வாசிப்பால் காலத்தோடு ஓடிக்கொண்டே இருப்பவர்.

அன்றாட நிகழ்வுகளையும், அரசியலையும் புதுப்பித்துக் கொண்டே இருப்பவர். இப்போதும் இன்றைய ரசனை மாற்றத்திற்கேற்றவாறு கதைகளை அவர் எழுதிக்கொண்டு தானிருப்பார். அவரது உழைப்பும், அறிவும் ஓய்வறியாதது. வாழ்க்கையிலிருந்து கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பது இவரது தனித்திறமை. செய்தித்தாள்களில் வாசிப்பவற்றை நாம் வெறும் செய்திகளாகக் கடந்து போயிருப்போம்.. ஆனால் அவற்றில் மறைந்திருக்கும் கதைகளை அடையாளம் கண்டு அதனை தொகுத்து வைத்திருப்பார்.

ஒரு திரை எழுத்தாளராக அவரது ஆளுமையையும், கம்பீரத்தையும், காட்சியமைப்புகளைத் தொகுக்கும் நுணுக்கத்தையும் பார்ப்பவர்கள் வியந்து போவார்கள். அவர் எழுத்தாளர் மட்டுமல்ல, பொண்ணு ஊருக்குப் புதுசு உள்ளிட்ட வணிகப்படங்களையும், உப்பு உள்ளிட்ட கலைப்படங்களையும் இயக்கியிருக்கிறார்.

திரைக்கதை என்றால் பாக்யராஜ் என்ற தனி அடையாளம் இருப்பதுபோல அந்த காலகட்டத்தில் வசனம் எழுதுவது ஆர்.செல்வராஜ்க்கு தனி அடையாளம் இருந்தது. சூழலுக்கு ஏற்ப வசனம் எழுதுவது அப்படி ஒன்றும் எளிதானதல்ல. கதைக்களம், பேசப்படும் பாத்திரம், கதையின் சூழல் போன்றவை முழுமையாக உணரப்பட்டிருந்தால் மட்டுமே வசனம் கொட்டும். அந்த வகையில் திரைக்கதை மற்றும் வசனம் எழுதுவதில் அன்னக்கிளி ஆர்.செல்வராஜ்க்கு தனி இடம் உண்டு.

Updated On: 18 Aug 2023 4:11 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  3. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  4. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  5. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  8. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  9. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  10. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்