அது என்னங்க.. எஸ்ஐபி (SIP)..? வருமானம் பார்க்க இது ஒரு வழி..!
What is SIP Investment in Tamil-பணத்தை சேமிக்கவும் முதலீடு செய்யவும், அதைப் பெருக்கவும் எஸ்ஐபி (SIP) நல்ல ஒரு முதலீட்டு வழியாக கருதப்படுகிறது. எஸ்ஐபி என்பது ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ந்து முதலீடு செய்வதாகும்.
HIGHLIGHTS
What is SIP Investment in Tamil-எஸ்ஐபி(SIP) என அழைக்கப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் ஒரு வழிமுறையாகும். மியூச்சுவல் ஃபண்டில் பாரம்பரியமாக மொத்தமாக முதலீடு செய்வதற்கு மாற்றாகத் தவணை முறையில் முதலீடு செய்வதையே எஸ்ஐபி (SIP)என அழைக்கின்றனர்.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) என்பது மியூச்சுவல் ஃபண்ட்ஸின் மூலம் வழங்கப்படும் ஒரு முதலீட்டு வழியாகும். இதில் ஒட்டுமொத்தமாக முதலீடு செய்வதற்குப் பதிலாக, மாதாமாதம் அல்லது காலாண்டுக்கு ஒருமுறை என்ற வழக்கமான கால இடைவெளியில் ஒரு நிலையான தொகையை மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ஒருவர் முதலீடு செய்ய முடியும். ஒருவர் மாதம் ரூ. 500 என்ற அளவிலான சிறு தொகையைக் கூட தவணையாகச் செலுத்த முடியும். இது ஒரு தொடர் வைப்பு போன்றது. ஒவ்வொரு மாதமும், குறிப்பிட்ட தொகையை பற்று வைப்பதற்கு உங்கள் வங்கிக்கு ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷனை வழங்க முடியும் என்பதால், இது வசதியானது.
சந்தை ஏற்ற இறக்கங்கள் மற்றும் சந்தையின் நேரம் போன்றவை குறித்த எந்தவொரு கவலையுமின்றி, ஒழுங்கான முறையில் முதலீடு செய்வதற்கு உதவுவதால், MF முதலீட்டாளர்களின் மத்தியில் SIP பிரபலமடைந்து வருகிறது. மியூச்சுவல் ஃபண்ட்ஸால் வழங்கப்படும் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான்கள்,நீண்டகால முதலீட்டு உலகத்தில் நுழைவதற்கு எளிதான சிறந்த வழியாகும். இதற்கு நீங்கள் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்வது என்பது முக்கியமானது. அதாவது, முடிவில் அதிக ரிட்டர்ன்களைப் பெறுவதற்கு, ஆரம்பக் கட்டத்திலேயே முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். உங்கள் முதலீடுகளில் இருந்து சிறந்த ரிட்டர்ன்களை பெறுவதற்கு, ஆரம்பக் கட்டத்திலேயே முதலீட்டை தொடங்குதல் மற்றும் வழக்கமான முறையில் முதலீடு செய்தல் ஆகியவை உங்களின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும்.
தொடர்ச்சியான வைப்புத் தொகையை (recurring deposit) போலவே, ஒரு முதலீட்டாளர் நிலையான கால இடைவெளியில் (மாதாந்திரமாக இருக்கலாம் அல்லது காலாண்டு முதலீடாக இருக்கலாம்) SIP மூலம் முதலீடு செய்யலாம். மாதத்திற்கு குறைந்தபட்ஷமாக ரூ.100க்கு கூட மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் எஸ்ஐபி வாயிலாக முதலீடு செய்ய முடியும்.தொடர்ச்சியான வைப்புத்தொகையில் 6-7% ரிடர்ன்ஸ் கிடைக்கும். SIP-இல் சந்தை நிலவரத்தைப் பொருத்து 12% வரை அல்லது அதற்கு மேலும் கூட கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. SIP-இல் முதலீடு செய்வதால் பல நன்மைகள் உள்ளன.
SIP-ல் முதலீடு செய்யும் முன் சில அடிப்படை விஷயங்களை கவனிக்கவேண்டும். உங்கள் நிதி இலக்குகளைச் சரியாகத் திட்டமிடுதல் அவசியம். ஒவ்வொரு இலக்கையும் ஒரு குறிப்பிட்ட தொகை மூலமாக அதை அடைய எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பதை சரியாக கணிக்கவேண்டும். அந்த திட்டமிடுதலுடன் SIP-ல் முதலீடு செய்வதே புத்திசாலித்தனம். வீடு வாங்குவது அல்லது ஓய்வுக்குப்பின்னர் பெறும் வருமானங்களுக்கு SIP-ல் இருந்து கிடைக்கும் இலாபம் கைகொடுக்கும்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2