/* */

பிராந்திய மொழிகளில் பங்குச்சந்தை அறியும் வசதி : நிதியமைச்சர் தொடக்கம்

பங்குச்சந்தை குறித்து பிராந்திய மொழிகளில் அறிந்து கொள்ள புதிய திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

பிராந்திய மொழிகளில் பங்குச்சந்தை அறியும் வசதி : நிதியமைச்சர் தொடக்கம்
X

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மும்பையில் நடந்த நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் நிறுவனத்தின்  வெள்ளி விழா கொண்டாட்டத்தில் பேசியபோது.

இந்திய சில்லறை முதலீட்டாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் முக்கிய பங்கு வகித்து உள்ளனர். அந்நிய முதலீட்டாளர்கள் போலில்லாமல் தங்களால் என்ன செய்யமுடியும் என்பதை இவ்வுலகிற்கு காட்டியுள்ளனர் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மும்பையில் நேற்று நடந்த நேஷனல் செக்யூரிட்டீஸ் டெபாசிட்டரி லிமிடெட் (என்எஸ்டிஎல்) -ன் வெள்ளி விழா கொண்டாட்டத்தில் பேசினார்.

சில்லறை முதலீட்டாளர்கள் சார்பில் 2019-20ல் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 4 லட்சம் புதிய டிமேட் கணக்குகள் தொடங்கப்பட்டு, 2020-21ல் மாதத்திற்கு 12 லட்சமாக மூன்று மடங்கு அதிகரித்து, 2021-22ல் மாதத்திற்கு சுமார் 26 லட்சமாக அதிகரித்துள்ளது" என்று அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் பங்குச் சந்தை குறித்து மாணவர்கள் இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் கற்றுக்கொள்வதற்காக 'பங்குச் சந்தைக்கான ஏகலைவா' எனும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பங்குச் சந்தை, நிதி ஆகியவற்றைக் குறித்து அறிந்து கொள்ளும் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட அவர், இவை அனைத்தும் பிராந்திய மொழியில் கிடைப்பதால் மாணவர்கள் பயனடைவார்கள் என்று தெரிவித்தார்.

Updated On: 8 May 2022 8:14 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்