/* */

8ம் தேதி முதல் பிளஸ்2-க்கு மீண்டும் நேரடி வகுப்பு : தமிழக அரசு

பிளஸ் 2 வகுப்புகளுக்கு மீண்டு நேரடி வகுப்புகளை தொடங்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது.

HIGHLIGHTS

8ம் தேதி முதல் பிளஸ்2-க்கு  மீண்டும் நேரடி வகுப்பு : தமிழக அரசு
X

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 8ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை நடத்த மீண்டும் பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்ததால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பிளஸ் 2வகுப்புக்கு மட்டும், நேரடி வகுப்புகள் நடந்து வந்தன. தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளதால் பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை மறுதினம் (7ம் தேதி )வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் 8ம் தேதி முதல், பிளஸ் 2மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள் நடத்த, பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே 3ம் தேதி பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாக மாணவர்களுக்கு இரண்டாவது ரிவிஸன் தேர்வு நடத்தவும், பிராக்டிகல் தேர்வுகளை ஏப்ரலில் நடத்தி முடிக்கவும் அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

Updated On: 5 April 2021 12:14 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  4. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  6. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  7. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  8. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  9. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  10. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா