Begin typing your search above and press return to search.
விவசாயம்பெருந்தொற்றுலைஃப்ஸ்டைல்மீம்ஸ்ஆன்மீகம்தொழில்நுட்பம்சுற்றுலாவானிலைவீடியோவாகனம்டாக்டர் சார்வழிகாட்டி
தொடர் விடுமுறை காரணமாக குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறை காரணமாக குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
HIGHLIGHTS
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடையநல்லூர், செங்கோட்டை , குற்றாலம், சங்கரன்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் மாலை நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்தது. அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் மழை பெய்ததால் குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் சீராக விழுகிறது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி என தொடர்ந்து விடுமுறையாக இருப்பதால், குற்றாலத்திற்கு அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை புரிந்துள்ளனர். அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்.