/* */

கிடப்பில் போடப்பட்ட சாலை விரிவாக்க பணி: பொதுமக்கள் அவதி

கிரீன் சர்க்கிள் பகுதியில் சர்வீஸ் லைன்கள் அகலம் அதிகரிக்கப்படும் என கூறியிருந்தாலும் பணிகள் தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை

HIGHLIGHTS

கிடப்பில் போடப்பட்ட சாலை விரிவாக்க பணி: பொதுமக்கள் அவதி
X

வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதி 

வேலுாரில் அதிகரித்து வரும் வாகன பெருக்கம் காரணமாக, நாளுக்குநாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. கர்நாடக, ஆந்திரா மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களும், சேலம், பெங்களூர், சென்னை இணைப்பு பகுதியானதால் அனைத்து வாகனங்களும் வேலுார் வழியாகவே செல்கின்றன. இதனால், நகரின் இதயப்பகுதியான கிரீன் சர்க்கிளில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

இதனால், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்பவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இதை தடுக்கவேண்டும், நெரிசலை தவிர்க்க மாற்று வழிகளை கையாள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனாலும், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியாமல் அதிகாரிகள் தவித்தனர்.

இதையடுத்து, கடந்த ஆண்டு போக்குவரத்து நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டது. கிரீன் சர்க்கிளில் வாகனங்கள் முற்றுகையிடுவதை தடுக்க, சர்வீஸ் லைன்களில் திருப்பி விடப்பட்டன. சர்வீஸ் சாலையில் மெக்கானிக் ஷெட்டுகள் அதிகளவில் இருப்பதால், இது மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. வாகன போக்குவரத்து சிக்கலுக்கு இன்னும் தீர்வு எட்டப்படாமலே இருக்கிறது.

இதை தவிர்க்க, இப்போது போக்குவரத்து அதிகம் உள்ள கிரீன் சர்க்கிள் பகுதியிலிருந்து சேண்பாக்கம் ரயில்வே மேம்பாலம் வரையும், அங்கிருந்து புதிய பேருந்து நிலையம் வரை உள்ள சர்வீஸ் லைன்கள் இப்போது உள்ள 5 மீட்டர் அகலத்தை 8.5 மீட்டராக அதிகரிக்கப்படும். இதனால், போக்குவரத்து எளிதாகும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆகஸ்டு மாதமே அதற்கான பணிகள் தொடங்கும் என கூறியிருந்தார். ஆனால், இது வரை அந்த பணிகள் தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.

இதுகுறித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில், ''கிரீன் சர்க்கிள் அளவு குறைப்பது, சர்வீஸ் லைன் அகலத்தை அதிகரிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வரைபடம் போட்டு தந்தோம். இதில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் பங்கும் வருகிறது. அதனால், அந்த திட்ட அறிக்கையை தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய மண்டல அலுவலருக்கு அனுப்பினோம். பலமுறை தொடர்ந்து இது குறித்து பேசி வருகிறோம்.

வேலுார் வந்த மத்திய தரைவழி போக்குவரத்துத்துறை இணை அமைச்சரிடமும் இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறோம். அவர் 'டெக்னிக்கல்' ரிப்போர்ட் வாங்கிக் கொடுங்கள்' என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். அதைத்தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். உடனடியாக சாலை விரிவாக்கத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். விரைவில் பணிகள் தொடங்க முயற்சித்து வருகிறோம்' என்றார்

Updated On: 6 March 2023 11:19 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!