/* */

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் 21 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் 21 டன் ரேஷன் அரிசியை லாரியுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்; அரிசி கடத்திய 2 பேர் தப்பியோட்டம்

HIGHLIGHTS

காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் 21 டன் ரேஷன் அரிசி லாரியுடன் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி கடத்திய லாரி 

வேலூர்மாவட்டம்,வேலூர் பிள்ளையார்குப்பம் வழியாக சென்னையிலிருந்து - கர்நாடகாவுக்கு லாரி ஒன்றில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்துவதாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பறக்கும் படை வட்டாச்சியர் கோட்டீஸ்வரன் பிள்ளையார்குப்பம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது லாரி ஒன்று நிற்காமல் வேகமாக சென்றது. அதனை அதிகாரிகள் துரத்தி பின் தொடர்ந்து சென்றனர்.

காட்பாடியில் தமிழக ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள கிறிஸ்டியான்பேட்டையில் லாரியை நிறுத்திவிட்டு இரண்டு பேர்தப்பி ஓடிவிட்டனர். பின்னர் லாரியை சோதனை செய்த போது அதில் 21 டன் ரேஷன் அரிசி இருந்தது அதனை அதிகாரிகள் லாரியுடன் பறிமுதல் செய்து வேலூர் நுகர் பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து காட்பாடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அரிசியை கடத்தி வந்து தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்

Updated On: 6 Aug 2021 5:46 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!