/* */

கேரளா-மூணாறு இடையே நிறுத்தப்பட்ட பஸ் சேவை மீண்டும் இயக்கம்

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து கேரளா மாநிலம் மறையூர், மூணாறு பகுதிகளுக்கு மீண்டும் பஸ்கள் இயக்கப்படுகிறது.

HIGHLIGHTS

கேரளா-மூணாறு இடையே நிறுத்தப்பட்ட பஸ் சேவை மீண்டும் இயக்கம்
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து கேரளா மாநிலம் மறையூர், மூணாறு பகுதிகளுக்கு தமிழகம் மற்றும் கேரளா மாநில பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கால், இந்த வழித்தடத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

தற்போது உடுமலையில் இருந்து மாநில எல்லையான சின்னாறு வரை உடுமலை அரசு போக்குவரத்து பணிமனை கிளையில் இருந்து இரண்டு அரசு பஸ்களும், கேரள மாநில பஸ்கள் மூணாறில் இருந்து சின்னாறு வரையும் இயக்கப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் மாநில எல்லையில் இறங்கி மறு எல்லை வரை நடந்து சென்று பஸ் ஏறி செல்கின்றனர். பஸ்களில் பயணம் செய்ய இரண்டு டோஸ் தடுப்பூசி அல்லது 72 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா தொற்று இல்லை என்ற சான்று கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 3 Dec 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  3. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  4. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  6. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  7. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  8. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  10. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்