/* */

விவசாயிகள் விழிப்புணர்வு கருத்தரங்கம்

உடுமலையில் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

விவசாயிகள் விழிப்புணர்வு கருத்தரங்கம்
X

உடுமலை தனியார் கல்லூரியில் நடைபெற்ற விவசாய கருத்தரங்கில் பேசிய அதிகாரிகள்.

உடுமலை ஜி.வி.ஜி., கலையரங்கில், மத்திய அரசின் விவசாய மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மற்றும் 'உடுமலை பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா' சார்பில், விவசாயிகள் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

பில்டர்ஸ் அசோசியேஷன் நிர்வாகி பரமேஸ்வரன் வரவேற்றார். மத்திய அரசின், 'அபேடா' அமைப்பின் செயலர் மாதையன் அங்கமுத்து காணொளி வாயிலாக தலைமை ஏற்று பேசினார். 'சேம்பர் ஆப் காமர்ஸ்' தலைவர்கள் கோபாலகிருஷ்ணன் (பொள்ளாச்சி), அருண்கார்த்திக் (உடுமலை), ராஜலட்சுமி கெங்குசாமி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ரவீந்திரன் உட்பட பலர் பேசினர்.

பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் பேசியதாவது: 'நம் நாட்டில், வேளாண் தொழில் பிரதானமாக இருந்தாலும், ஏற்றுமதியானது, பிற நாடுகளுடன் ஒப்பிடும் போது, ஒரு சதவீதம் அளவுக்கே உள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை துவக்கி, சிறு, குறு விவசாயிகளை, அதில், ஒருங்கிணைத்து, மதிப்பு கூட்டுதல் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை பெற வாய்ப்புள்ளது.

இதற்காக மத்திய, மாநில அரசுகள் சார்பில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நிதி ஒதுக்கீடும் செய்யப்படுகிறது. ஆனால், திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு போதியளவு இல்லை. எனவே, விவசாயிகளை ஒருங்கிணைத்து, வழிகாட்டினால், அவர்களுக்கு நிரந்தர வருவாயும் கிடைக்கும். இவ்வாறு பேசினார். திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத், விவசாய மேம்பாட்டுக்கான திட்டங்கள் குறித்து பேசினார்

Updated On: 8 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!