/* */

திருப்பூரில் தொடர்ந்து 3வது நாளாக மழை: இதமான வானிலையால் மக்கள் நிம்மதி

திருப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து 3வது நாளாக இன்று மாலையும் மழை பெய்து வருகிறது.

HIGHLIGHTS

திருப்பூரில் தொடர்ந்து 3வது நாளாக மழை: இதமான வானிலையால் மக்கள் நிம்மதி
X

கடந்த சில வாரங்களாக, திருப்பூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. மே மாத அக்னி நட்சத்திர வெயிலுக்கு இணையாக நிலவிய வெப்பத்தால், மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இதனிடையே, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கோடை மழைக்கு வாய்ப்பிருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, கடந்த இரு தினங்களாக, திருப்பூர், அவினாசி, பல்லடம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இரு தினங்களாக வெயில் இல்லாமல் மேகமூட்டமாக இருந்து வந்தது. இன்றும் அதேபோன்ற வானிலை நிலவியது. இன்று மாலை, திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதை தொடர்ந்து காற்றுடன் மிதமான மழை பெய்தது.

தொடர்ந்து 3 நாட்களாக திருப்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், வெப்பத்தின் தாக்கம் குறைந்துள்ளது. இதனால், மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Updated On: 15 April 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்