/* */

அதிகாலையில் வாகன விபத்து: திருப்பூரை சேர்ந்த இருவர் பலி

பாலக்காடு அருகே வாளையார் செக்போஸ்டில் நடந்த வாகன விபத்தில், திருப்பூரைச் சேர்ந்த இருவர் பலியாகினர்.

HIGHLIGHTS

அதிகாலையில் வாகன விபத்து: திருப்பூரை சேர்ந்த இருவர் பலி
X

விபத்தில் நொறுங்கிய கார். 

திருப்பூர் மாவட்டம், கூத்தம்பாளையம் அண்ணாநகர் வடக்கு பகுதியை சேர்ந்தவர்கள் பாலாஜி (49), முருகேசன் (47). இவர்களது நண்பர் பத்ருதீன் (40), டிரைவர் மைனுதீன் (38) ஆகியோர் திருப்பூரில் பனியன் வியாபாரம் செய்து வருகின்றனர்.

வியாபார விஷயமாக திருப்பூர் வந்த வெளிநாட்டினரை, காரில், கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் இறக்கிவிட்டு, இன்று அதிகாலை, திருப்பூர் திரும்பிக் கொண்டிருந்தனர். கோவை பாலக்காடு எல்லையான வாளையாறு செக்போஸ்ட் அருகில் வந்த போது, அதிகாலை 5.45 மணிக்கு எதிர்பாராத விதமாக அவர்கள் வந்த இன்னோவா கார், நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.

இந்த கோர விபத்தில், பாலாஜி, முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்ற மூவரும் லேசான காயங்களுடன் தப்பினர். இறந்தவர்களின் உடல்கள் பாலக்காடு அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன.

Updated On: 31 March 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்