/* */

பல்லடம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலியானார்.

HIGHLIGHTS

பல்லடம் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
X

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே அண்ணா நகர், முதல் தெருவை சேர்ந்தவர் தண்டபாணி,62. தச்சு தொழிலாளி. இவர், பல்லடம் அருகே உள்ள க. அய்யம்பாளையம் பகுதியில் ஒருவரின் வீட்டில் தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு கதவு பொருத்துவதற்காக, கதவை தூக்கிக்கொண்டு படிக்கட்டில் ஏறிச் சென்றார். அப்போது, தவறி கீழே விழுந்தார். இதில், அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, பல்லடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

Updated On: 12 Sep 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!