/* */

பல்லடம் அருகே வடமாநில தொழிலாளி கொலை

பல்லடம் அருகே வடமாநில தொழிலாளி அடித்து கொலை செய்யப்படடார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

பல்லடம் அருகே வடமாநில தொழிலாளி கொலை
X

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த நாரணாபுரம் எடத்தளாங்காட்டு தோட்டத்தில் வாலிபர், இரண்டு கைகள் கட்டப்பட்டநிலையில், தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டிருந்தது. தலையில் கொடூரமாக சிதைத்து கொலை செய்யப்பட்டு இருந்தது.

இதை கண்ட அப்பகுதி மக்கள் பல்லடம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பல்லடம் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றிவிசாரித்தனர். மேலும், கொலை நடந்த இடத்திற்கு வந்த மோப்ப நாய் டேவில், மோப்பம் பிடித்து சிறிதுதூரம் சென்று நின்று விட்டது.

கைரேகை நிபுணர்கள் உடலை ஆய்வு செய்தனர். போலீஸார் விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர், அருகே உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்த விஷால்பால், இவர், உத்தரபிரதேச மாநிலம் சூரன் நகர் உள்ள அம்பேத்கார் நகரை சேர்ந்தவர். கடந்த ஒரு மாதத்துக்கு முன் இங்கு வேலை சேர்ந்துள்ளார். நேற்று இரவு வேலை முடிந்து வெளியில் சென்றவர் மீண்டும் வீடு திரும்ப வில்லை என தெரியவந்தது. இந்த கொலைக்கான காரணம் குறித்து பல்லடம் போலீஸார் விசாரிக்கின்றனர்.


Updated On: 8 May 2021 4:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?