/* */

பல்லடத்தில் வெளிமாநில மதுபானம் விற்றவர் கைது

திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் வெளிமாநில மதுபானம் விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பல்லடத்தில் வெளிமாநில மதுபானம் விற்றவர் கைது
X

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்னமும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இதனால், ரகசியமாக வெளி மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்து சட்டவிரோதமாக விற்பனை செய்வது, பல இடங்களில் அதிகரித்து வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில், சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக பல்லடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பல்லடம் , மங்கலம் ரோட்டில் வாய்க்கால்மேடு பகுதியில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வாலிபர் ஒருவர், போலீஸை கண்டு தப்பி ஓட முயன்றார். அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இதில், அவர் பல்லடம் பிடிஓ காலனியை சேர்ந்த சீனிவாசன்,27, என்பதும், மது பாக்கெட் வாங்கி சட்டவிரோதமாக விற்பனை செய்வதும் தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On: 14 Jun 2021 1:48 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  2. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  3. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  4. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  5. வந்தவாசி
    மது போதையில் ரகளை செய்த மகன்; கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ‘ பாசக்கார’...
  6. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  7. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  8. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  10. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...