/* */

தேசிய திறனாய்வு தேர்வில் சின்னமுத்தூர் அரசு பள்ளி மாணவி மாநில அளவில் தேர்ச்சி

தேசிய திறனாய்வு தேர்வில், திருப்பூர் மாவட்டம், சின்னமுத்தூர் அரசுபள்ளி மாணவி சுபிக்‌ஷா, மாநில அளவில் தேர்வு பெற்றுள்ளார்.

HIGHLIGHTS

தேசிய திறனாய்வு தேர்வில் சின்னமுத்தூர்  அரசு பள்ளி மாணவி மாநில அளவில் தேர்ச்சி
X

மாணவி சுபிக்சா

தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் 8 ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு போட்டி நடைபெற்றது. இதில், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முத்தூர் நகர சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த அரசு நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கான தேர்வு, முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

இந்த தேர்வில், சின்னமுத்தூர் அரசு நடுநிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவி ஜி.சுபிக்சா, மாநில அளவில் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்து உள்ளார். வெற்றி பெற்ற மாணவியை, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் பாராட்டினர். வெற்றி பெற்ற மாணவிக்கு 9ம் வகுப்பு முதல் ப்ளஸ்2 வரையில் , கல்வித்துறை சார்பில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updated On: 24 Jun 2021 8:21 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்