/* */

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு- பிரதமர் மோடி கண்டனம்

பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு- பிரதமர் மோடி கண்டனம்
X

முதல்வரின் தாயை இழிவுபடுத்தி பேசியது கண்டனத்திற்குரியது என திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரதமர் மோடி பேசினார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ், தி.மு.க வின் தாக்குதல் என்பது பெண்கள் மீது உள்ளது. நான், அநீதிக்கு எதிராக எந்த சமரசமும் இல்லாத சகோதர, சகோதரிகளின் நிலத்தில் இருக்கிறேன்.

காங்கிரஸ் மற்றும் தி.மு.கவினர் தமிழக முதல்வரின் தாயார் குறித்து அவதூறாக பேசியுள்ளனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெண்களையும் அவதூறாக பேசுவார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் திண்டுக்கல் லியோனி, பெண்கள் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசியுள்ளார். தி.மு.க தலைமை அதனைக் கண்டிக்கவில்லை.கடந்த 1989-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் தி.மு.க தலைவர்கள், ஜெயலலிதாவிடம் நடந்து கொண்டது குறித்து நினைத்துப் பார்க்க முடியவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Updated On: 31 March 2021 4:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  3. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  4. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  6. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  7. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  9. பொன்னேரி
    மீஞ்சூர், சோழவாரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?