/* */

இழப்பீடு வழங்காததால் தாராபுரத்தில் அரசு பஸ் ஜப்தி

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், விபத்து இழப்பீடு வழங்காததால், அரசு பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.

HIGHLIGHTS

இழப்பீடு வழங்காததால் தாராபுரத்தில் அரசு பஸ் ஜப்தி
X

திருப்பூா் மணியகாரம் பாளையத்தை அடுத்துள்ள வள்ளியம்மை நகா் பகுதியை சோ்ந்தவா் சின்னதுரை மகன் ரவிக்குமார் (வயது38). திருமணம் ஆகாதவா். இவா் கடந்த 2015-ம் ஆண்டு ஒட்டன்சத்திரத்தில் இருந்து, திருப்பூருக்கு டூ வீலரில் சென்று கொண்டிருந்தார்.

தாராபுரம் அருகே, ஈரோடு ரோடு பிரிவு பகுதியில் அவா் சென்று கொண்டிருந்த போது, திருப்பூரில் இருந்து திண்டுக்கலுக்கு சென்ற அரசு பஸ், அவரது டூ வீலர் மீது மோதியது. இந்த விபத்தில், சம்பவ இடத்திலேயே ரவிக்குமார் பலியானார். இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இழப்பீடு கேட்டு, ரவிக்குமாரின் குடும்பத்தினர், தாராபுரம் கூடுதல் மாவட்ட நீதி மன்றத்தில் வழக்கு தொடந்தனர். இந்த வழக்கில் ரவிக்குமார் குடும்பத்துக்கு ரூ.9 லட்சத்து 57 ஆயிரத்து 457 வழங்கவேண்டும் என, 2018-ம் ஆண்டு தீா்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் நஷ்டஈடு தொகையை அரசு போக்குவரத்து கழகம் வழங்காமல் தாமதம் செய்து வந்தது.

இதையடுத்து, நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிமன்ற நீதிபதி கருணாநிதி, அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். கோர்ட்டு உத்தரவின் பேரில், கோர்ட் பணியாளா்கள் தாராபுரம் பஸ்நிலையத்தில் நின்று கொண்டு இருந்த திருப்பூா்-போடி அரசு பஸ்சை, நேற்று ஜப்தி செய்தனா். அதில் இருந்த பயணிகளை இறங்க செய்து வேறு பஸ்சில் அனுப்பி வைத்தனா். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Updated On: 30 April 2021 2:04 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  2. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  4. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  6. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  7. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  8. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  9. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  10. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா