/* */

விளைச்சல் குறைந்தது: விலை அதிகரித்தது!

நிலக்கடலை விளைச்சல் குறைந்த நிலையில், தேவை அதிகரித்ததால், விலை உயர்ந்து காணப்பட்டது.

HIGHLIGHTS

விளைச்சல் குறைந்தது: விலை அதிகரித்தது!
X

பைல் படம்.

திருப்பூர் மாவட்டத்தில், அவினாசி, சேவூர், ஈரோடு மாவட்டத்தில், கோபி, அந்தியூர், நம்பியூர் உள்ளிட்ட பல இடங்களில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அவினாசி, சேவூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், வாரந்தோறும் நடக்கும் ஏலத்தில், நிலக்கடலை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த, செப்டம்பர் மாதம் துவங்கிய நிலக்கடலை அறுவடை சீசன், தற்போது முடிவுக்கு வந்தது. இருப்பினும், ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், நிலக்கடலைக்கான தேவை அதிகரித்து காணப்பட்டது. வியாபாரிகள், அதிக விலைக்கு ஏலம் கோரினர்.

கோபி, அந்தியூர் பகுதிகளில் உள்ள விவசாயிகள், நிலக்கடலையை இருப்பு வைத்து, விற்பனைக்கு எடுத்து வந்தனர். இதனால், முதல் தர நிலக்கடலைக்கு, குவிண்டாலுக்கு அதிகபட்சம், 7,000 ரூபாய் வரை விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 16 Nov 2021 1:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  6. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  7. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?