/* */

தறிக்குழிக்குள் தேங்கிய தண்ணீர்: நெசவாளர்கள் கண்ணீர்

அவினாசி அருகே, நெசவாளர் குடியிருப்புக்குள் நிலத்தடியில் மழைநீர் கசிந்ததால், தறி இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

தறிக்குழிக்குள் தேங்கிய தண்ணீர்: நெசவாளர்கள் கண்ணீர்
X

அவினாசி அருகே, தத்தனூரில் நெசவாளர் குடியிருப்புக்குள் நிலத்தடியில் மழைநீர் கசிந்தது.

திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகேயுள்ள தத்தனுார் ஊராட்சிக்கு உட்பட்ட, சாவக்கட்டுப்பாளையத்தில், கைத்தறி நெசவு தொழிலில் பெரும்பாலான குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். நெசவாளர்கள், தங்கள் வீட்டின் தரைப்பகுதியில் இருந்து நிலத்தடியில், மூன்றடி ஆழத்துக்கு குழி தோண்டி, தறியை இயக்குவதற்குரிய பகுதியை குழிக்குள் பொருத்துவர். தரையில் அமர்ந்து, அந்த குழிக்குள் கால்களை செலுத்தி, தறியை இயக்குவர்.

கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதில், 10 வீடுகளில், நிலத்தடியில் தண்ணீர் ஊறியதால், தறிக்குழிக்குள் தண்ணீர் கசிந்தது. இதனால், தறி இயக்குவதில், சிரமம் ஏற்பட்டுள்ளது என, நெசவாளர்கள் கூறினர். கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன், இதுபோன்று தறிக்குழிக்குள் தண்ணீர் நிரம்பியது. பாதிப்பு குறித்து, வருவாய் துறையினரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தேவையான ஏற்பாடுகளை செய்வதாக தெரிவித்துள்ளதாக, தத்தனுார் ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் கூறினார்.

Updated On: 10 Nov 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  3. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  4. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  5. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  6. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  7. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  8. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  9. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  10. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!