/* */

பனிப்பொழிவு எதிரொலி: மிரள வைக்கும் மலை காய்கறி விலையேற்றம்

கடும் பனிப்பொழிவால் மலைக்காய்கறிகளின் விலை ‘கிடுகிடு’ வென உயர்ந்துள்ளது.

HIGHLIGHTS

பனிப்பொழிவு எதிரொலி: மிரள வைக்கும் மலை காய்கறி விலையேற்றம்
X

நீலகிரி மாவட்டம் ஊட்டி, கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் விளையும், கேரட், பீட்ரூட், பீன்ஸ், முட்டைகோஸ் ஆகியவை, மேட்டுப்பாளையம் மண்டி மூலம் விற்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களில் உள்ள காய்கறி கடைகளில், அவை விற்கப்படுகின்றன.

நீலகிரி மாவட்டத்தின் சமீபத்தில் பெய்த தொடர் மழையால், விவசாயம் பாதிக்கப்பட்டது. மேலும், தொடர் பனிப்பொழிவால் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் கருகின. இதனால், மகசூல் வெகுவாக குறைந்தது; இதனால், கடைகளுக்கான வரத்தும் அடியோடு சரிந்தது.

இதனால், ஒரு கிலோ கேரட், 120 ரூபாய், பீட்ரூட், பீன்ஸ் ஆகியவை, 90 ரூபாய், முட்டை கோஸ், 80 ரூபாய் என விற்கப்பட்டது. பிற மாவட்டங்களில் இருந்து வரும் காய்கறிகளை விட, மலை காய்கறிகளின் சுவை அதிகம் என்பதால், அவற்றை விரும்பி வாங்கும் மக்கள் அதிகம். இந்நிலையில் திடீர் விலையேற்றத்தால், பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Updated On: 28 Dec 2021 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  2. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  3. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  4. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  5. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...
  6. வீடியோ
    சாம் பிட்ரோடா ஒரு பச்சை புளுகு மூட்டை ! இறங்கி அடித்த H ராஜா !...
  7. வீடியோ
    நிலை தடுமாறிய Amitshah ஹெலிகாப்டர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் !...
  8. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு எப்படி இருக்கும்?
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கடக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. லைஃப்ஸ்டைல்
    இணைந்தே வாழும் அன்றில் பறவையாய் வாழ்வோம் வாடா..!