/* */

கடைக்காரர்களே உஷார்! விதிமீறினால் இனி ரூ.5,000 அபராதம் விதிக்க முடிவு

அவினாசியில், பொது சுகாதார துறையினரின் விதிமீறி செயல்பட்ட கடைக்காரர்கள், பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கடைக்காரர்களே உஷார்! விதிமீறினால் இனி ரூ.5,000 அபராதம் விதிக்க முடிவு
X

திருப்பூர் மாவட்டம், அவினாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், மாவட்ட சுகாதாரப்பணிகள் துறை இணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார், அவிநாசி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சக்தி, சுகாதார ஆய்வாளர்கள் பரமன், ரமேஷ் மற்றும் மாவட்ட அளவில் நியமிக்கப்பட்டுள்ள புகையிலை தடுப்பு பிரிவு அலுவலர்கள் உள்ளிட்டோர், அவிநாசி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

சில கடைகளில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அக்கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்படி, கடைகளில் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களின் விளம்பரம் வைக்க கூடாது; சில கடைகளில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரத்தையும், அலுவலர்கள் அப்புறப்படுத்தி, அந்த கடைகளுக்கு அபராதம் விதித்தனர். பஸ் ஸ்டாண்டில், கடைகளுக்கு முன் நின்று, பீடி, சிகரட் பிடித்துக் கொண்டிருந்த பயணிகளுக்கும், அபராதம் விதித்தனர். 'பொது இடங்களில் புகைப்பிடிக்க கூடாது' என்ற அறிவுறுத்தலையும் வழங்கினர்.

கடைக்காரர்களிடம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சக்தி கூறுகையில், ''தடை செய்யப்பட்ட, சுகாதாரத்துறையின் விதிமீறி செயல்படும் கடைக்காரர்களுக்கு முதன்முறை என்பதால், 100, 500 ரூபாய் அபராதம் விதிக்கிறோம். மீணடும், மீண்டும் அத்தகைய செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தால், அதிகபட்சம், 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்,'' என்றார்.

சுகாதாரத்துறை துணை இயக்குனரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார் கடைக்காரர்களிம் கூறுகையில்,'பீடி, சிகரட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை பிடிப்பதால், புற்றுநோய் உள்ளிட்ட பெரும் தீங்கு விளைவிக்கும் என்பதைஅறிந்தே விற்பனை செய்யலாமா, உங்கள் வீடுகளில் உள்ள பிள்ளைகள், பீடி, சிகரட் பிடித்தால் ஏற்றுக்கொள்வீர்களா, அதுவும், பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகில் உள்ள இடம், பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யவே கூடாது. எனவே, மனிதாபமானத்துடன், அத்தகைய பொருட்களை விற்பனை செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்,'' என்றார்.

Updated On: 4 April 2022 2:24 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...