/* */

அவினாசி காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு

அவினாசி அருகே நடந்த கொலை சம்பவத்தில், குற்றவாளிகளை, சாதுயர்மாக பிடித்த அவினாசி காவல்துறை உதவி ஆய்வாளருக்கு, பாராட்டு சான்று வழங்கினார்.

HIGHLIGHTS

அவினாசி காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டு
X

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் பாராட்டு சான்று பெறும் அவிநாசி உதவி ஆய்வாளர் அமல் ஆரோக்கியதாஸ்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே, தெக்கலுாரில் உள்ள ஒரு பாலத்துக்கு அடியில், கடந்த மாதம் 21ம் தேதி, மாலை 3:00 மணிக்கு, பீகார் மாநிலத்தை சேர்ந்த அனில்குமார் யாதவர், 22 என்ற இளைஞர், மர்ம நபர்களால் பலமாக தாக்கப்பட்ட நிலையில், உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அருகே இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இது தொடர்பாக, அவினாசி காவல்துறை உதவி ஆய்வாளர் அமல் ஆரோக்கியதாஸ், வழக்குப்பபதிவு செய்து விசாரித்தார். இறந்த அனில் குமாரின் நண்பர்களை துருவி, துருவி விசாரித்ததில், அனில் குமார் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக தெரிய வந்தது. அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில், இந்த காதல் விவகாரம் பிடிக்காத, அந்த பெண்ணின் தந்தை ரவிச்சந்திரன், அவருடம் வேலை செய்யும் பாபு, மணிகண்டன், ரஞ்சித்குமார் ஆகியோர் தான் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர் என்ற விவரம் தெரிய வர, அவர்களை கைது செய்தார்.

வெறும், 24 மணி நேரத்தில், குற்றவாளிகளை பிடித்த உதவி ஆய்வாளரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷெசாங் சாய் பாராட்டி, ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Updated On: 14 Dec 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  4. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  6. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  9. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து
  10. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை