/* */

திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொரோனாவுக்கு பலி - அதிர்ச்சியில் மூதாட்டி சாவு

திருப்பூர் அருகே, கொரோனாவுக்கு 4 மகன்கள், ஒரு மருமகள் பலியாகினர். இந்த அதிர்ச்சியில் மூதாட்டியும் உயிரிழந்தது, பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

HIGHLIGHTS

திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்   கொரோனாவுக்கு பலி - அதிர்ச்சியில் மூதாட்டி சாவு
X

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் மிக அதிகமாக காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக 1500 ஆக இருந்த தொற்று பரவல், தற்போது 2 ஆயிரத்தை கடந்து செல்கிறது. தினசரி இறப்பு 20 க்கும் மேல் காணப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்ட போதிலும், பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகி உள்ளது.
இதனிடையே, திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே வெள்ளிரவெளி கிராமத்தை சேர்ந்தவர் தெய்வராஜ், 42, இவரது மனைவி சாந்தி, 35. இவர்கள் இருவருக்கும் கொரோனோ தொற்று பாதித்து, சில நாட்களுக்கு முன் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர். அதேபோல் தெய்வராஜின் அண்ணன்கள் ராஜா ,50, சவுந்தரராஜன், 45, தங்கராஜ், 52 ஆகியோரும் கொரோனாவால் இறந்துவிட்டனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கொரோனா தொற்றால் அடுத்து இறந்துள்ளனர். அதே பகுதியில் வசித்து வந்த, இறந்த நான்கு பேரின் தாயார் பாப்பாளுக்கு, 70, இதுபற்றி தெரிவிக்கப்படவில்லை. அவரும், வயது முதிர்ச்சியின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.
இந்நிலையில் தனது மகன்கள், மருமகள் யாரும் வராமல் இருக்கிறார்கள் என உறவினர்களிடம் கேட்டுள்ளார். அதற்கு உறவினர்கள் மகன்களும், மருமகளும் கொரோனா நோய் தொற்றால் இறந்து விட்டதாக கூறியுள்ளனர். தகவலை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து பாப்பாள், சிறிது நேரத்தில் இறந்து விட்டார். 4 மகன்கள், ஒரு மகள் இறந்த நிலையில், மூதாட்டியும் அதிர்ச்சியில் இறந்த சம்பவம் திருப்பூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 29 May 2021 2:55 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்