/* */

வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லை சோதனைச் சாவடியில் எஸ்.பி ஆய்வு

வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லைப் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில் எஸ்.பி பாலகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லை சோதனைச் சாவடியில் எஸ்.பி ஆய்வு
X

தமிழக ஆந்திர எல்லை சோதனை சாவடியில் ஆய்வு மேற்கொண்ட எஸ்பி பாலகிருஷ்ணன்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லை பகுதியில் மாவட்ட எஸ்பி பாலகிருஷ்ணன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது அண்ணாநகரில் உள்ள செக்போஸ்ட் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லக்கூடிய வாகனங்கள் மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய வாகனங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அதேபோன்று மலைப்பகுதி இருக்கக்கூடிய மாதகடப்பா செக் போஸ்டை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது காவலர்கள் தங்குவதற்கு ஓலைக் குடிசை அமைக்கப்பட்டிருப்பதை பார்வையிட்ட அவர், ஓலைக்குடிசை அகற்றி காவலர்கள் பாதுகாப்பாக இருக்க தகரத்தால் செய்யப்பட்ட அறை அமைத்து கொடுக்க உத்தரவிட்டார்.

மேலும், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு முழுமையாக கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படவும், பாதுகாப்பு பணியில் இருக்கக்கூடிய காவலர்களுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் ஏற்படுத்தித் தரவும் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது வாணியம்பாடி டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் மற்றும் தனிப்பிரிவு போலீசார் ஆகியோர் உடனிருந்தனர்

Updated On: 12 Dec 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!