Begin typing your search above and press return to search.
வாணியம்பாடி அருகே அரிசி மற்றும் மளிகை தொகுப்பினை எம்எல்ஏ தேவராஜ் வழங்கினார்
வாணியம்பாடி அருகே ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்த 300 பேருக்கு அரிசி மற்றும் மளிகை தொகுப்பினை எம்எல்ஏ தேவராஜ் வழங்கினார்
HIGHLIGHTS
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நாட்றம்பள்ளி ஒன்றியத்திற்குட்பட்ட கொடையாஞ்சி கிராமத்தில் கொரோனா காலகட்டத்தின் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் ஏழை எளிய குடும்பங்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் என 300 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட தொகுப்புகளை கொடையாஞ்சி ஊராட்சி திமுக பொறுப்பாளர்கள் ஏற்பாட்டில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்கள் க. தேவராஜ் வழங்கினார்
இந்நிகழ்வில் நாட்றம்பள்ளி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சூரியகுமார், நாட்றம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் முரளி மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்